ஆறுமுக வாதி குருநேரில் தடுத்தாள ஆலயத்தின் மேலு யரகீழுங் குதித்தாயே வேறுலக பாடு திறனேரி லளித்தானே வேலவனை ஓது மனநாளும் பணித்தானே நூறுகவி வானு லகிலாரு முனைப்போலே நுட்பமிகு நாலு கவிபாட முனைவாரோ மாறுமன தாம ழியவாராய் குருநாதா மாணவனு வேல வனையேத்த வகைதாநீ
ஆறுமுக வாதி குருநேரில் தடுத்தாள ஆலயத்தின் மேலு யரகீழுங் குதித்தாயே வேறுலக பாடு திறனேரி லளித்தானே வேலவனை ஓது மனநாளும் பணித்தானே நூறுகவி வானு லகிலாரு முனைப்போலே நுட்பமிகு நாலு கவிபாட முனைவாரோ மாறுமன தாம ழியவாராய் குருநாதா மாணவனு வேல வனையேத்த வகைதாநீ
ஏது மற்றவர் ஏழை எளியவர்
ஏற்றம் பெற்றிட ஏத மற்றுற வழியாக
ஈரி லற்றவர் ஏக சொற்றவர்
வேத வுத்தமர் மேக வொத்தவர் நிறநாதா
மாதை யற்றதோ ரூறை யற்றுற
ஆழி சூழ்திரு நாட்டின் கொற்றவன் தலைவீழ
வாதிற் செற்றுடன் மாதை மீட்டவி
ராம சந்திர ராஜ தத்துவ புருஷோனே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...