ஆலால முண்டா னலுதித் தடைந்தாறு
வேலாலே வென்றான் விதிசிறைத்தான் - பாலாழிசெவ்வாய், 17 மார்ச், 2026
சனி, 14 மார்ச், 2026
அரியருளை நாடி வெண்பா
அரியருளை நாடி யழுத குருகூர்க்
குருவருளை நாடிக் குறையி னொருகூறு
மண்டாது மண்வாழ வந்தாரி னம்பாவை
விண்டா ருளம்வாழும் விண்
குருபத்தி வெண்பா
குருபத்தி கொண்டாள் கொடுத்த கனியை
யரிபற்றி யன்றுவந் துண்டான் - குருபத்திக்
கேற்றமரி பத்தியின்மே லென்று தெளிவுறச்
சாற்றச் சவரியே சான்று
வெள்ளி, 13 மார்ச், 2026
கனிவுண்டு வெண்பா
கனியுண்டு தந்தாள் கனிவான பத்திக்
கினிதுண் டிசைந்தா னிறைவன் - மனதண்டா
தாணவத்தை யாடவத்தி னாறகற்று தூயருக்கு
மாணளிக்க நாவிசைக்கும் வான்
உறக்கத்தும் வெண்பா
உறக்கத்து முன்பே ருரைக்கின்றாள் பேதை
மறக்க வழியின்றி மாலி - லுறங்குதியோ
பாலாழி பாம்பணையு மாலேயுன் பித்தையிவ
ணூலாக நொந்துழலல் கண்டு
வியாழன், 12 மார்ச், 2026
காலாட்படையாகும் கட்டளைக் கலித்துறை
காலாட் படையாகும் கட்டக் களியின் உயிரனைய
மாலாட் படுத்தும் மனது மயங்கிப் பலகணக்கில்
தாலாட்டுப் போன்றெளி தன்றே சமனிலை காத்திருத்தல்
வேலட்டு மாயும் அரசியோ தேரோ விதிவகையே
வாழ்வை நேரிசை பஃறொடை வெண்பா
வாழ்வைத் தொலைத்து வளரப் பொருளீட்ட
றாழ்வைத் தரவிருக்கச் சார்வேனோ வூழ்வினையா
னிற்கும் பொருளதுவே நிற்குமெனுஞ் சான்றோர்சொல்
கற்கும் வழக்குக் கரந்ததுவோ பொற்குவியல்
வீணா மொருநா ளதனான் மெலிந்துவரும்
வாணாண் முடியுமுனே மைவளருங் காணாக
கண்டத்தர் காறொழலே நன்று
ஆலாலம் வெண்பா
ஆலால முண்டா னலுதித் தடைந்தாறு வேலாலே வென்றான் விதிசிறைத்தான் - பாலாழி பாம்பணையான் கண்டோன்று பாவை மணமுடித்தான் சாம்பிணியைப் போக்குமவன் றா...
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
கெண்டையார் கண்ணினா ணிலவும் - சடைக் கிண்டியார் கங்கையா ளுலவும் தொண்டையா லன்றடக் கிடவும் - மதித் துண்டையார் சீர்முடிக் கரவும் மண்டையான் மா...
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...