பூச்சுடி யையளித்தாள் பொய்யண்டா மெய்யழகி
னாச்சியா ணல்ல தமிழ்ப்பாவை - யாய்ச்சியா
யான்றுரைத்தா ளாண்டா ளெமை
பூச்சுடி யையளித்தாள் பொய்யண்டா மெய்யழகி
னாச்சியா ணல்ல தமிழ்ப்பாவை - யாய்ச்சியா
யான்றுரைத்தா ளாண்டா ளெமை
பால வடிவினன் பாங்க ளிளமகன்
கோல மயிலினன் கூர்வேலன் மூலன்
முருகன்சொன் மூவா மறை
இன்றுனதாள் போற்றி யியற்றமிழா லேத்தற்குச்
சென்றபிறப் பாற்றிய சீரென்னே செவ்வேளே
கொன்றையணி கூத்தற்கு மாசானே நன்றிசொல
நாடவறா தாசை யளி
விழிமறைக்குங் கைகள் விழைவொடுக்க லாமோ
வழைவனுப்புங் காந்த ளிதழ்கரக்க லாமோ
மழைகொடுக்கும் வானத்தை வேண்டாச் செழிவடக்குஞ்
செம்புலந் தேரினுமுண் டோ
கடலாழஞ் சென்று கடலாடைக் கன்னிக்
கிடரேது மின்றி யெயிற்றா லெடுத்து
விடலாமோ வென்முன் விழிக ணடமாடி
நாணுவதே காத னயம்
தாய்தந்த வேல்வாங்கித் தாரக சூரணிக்கு
மாய்தந்த வள்ளி மணாளன் முகமாறின்
சேய்தந்த செந்தமிழைச் சீர்பயில வாய்தந்த
வாழ்வின்கண் வாரா தயர்வு
மாளாது மாதவன் மாதர்க்குத் தீமைசெயுங்
கேளாது கேசவன் கேளிர்க்குக் கேடழிக்கு
மூளாத மெய்வினையு மூழ்கவே - யாளா
யவற்கடிமை செய்த லணி
பூச்சுடி யையளித்தாள் பொய்யண்டா மெய்யழகி னாச்சியா ணல்ல தமிழ்ப்பாவை - யாய்ச்சியா யான்றுரைத்தா ளாண்டா ளெமை