கனிதரு சுவையோ கவிதரு மகிழ்வோ
கடும்வெயில் பின்வரு மழையோ
பனிதரு நிலவின் பதைவழி யொளியோ
படர்ந்தொளிர் பால்வெளி யழகோ
சுனைதரு மணமோ சோர்வொழி யமுதோ
துணைவரு துகளொழி திருவோ
மனமகிழ் காதன் மாண்புரை செய்தல்
வைகலும் புதுமொழி வகையே
கனிதரு சுவையோ கவிதரு மகிழ்வோ
கடும்வெயில் பின்வரு மழையோ
பனிதரு நிலவின் பதைவழி யொளியோ
படர்ந்தொளிர் பால்வெளி யழகோ
சுனைதரு மணமோ சோர்வொழி யமுதோ
துணைவரு துகளொழி திருவோ
மனமகிழ் காதன் மாண்புரை செய்தல்
வைகலும் புதுமொழி வகையே
அரைகுறை ஞான மடரறி வாகும்
வரைகடந் தோங்கு மதியாய்க் - குரைகடல்கண்டவர் காணத் துடிப்பவர் கந்தன்
காதலிற் கசிந்தவ ரவர்தந்
தொண்டவர் செல்வம் விழைபவ ரிடராற்
சோர்ந்தவர் செந்தமிழ் நாட்டங்
கொண்டவர் வாழ்வி னழகிய னாடுங்
கொற்றவர் மற்றவ ரேத்தும்
விண்டரும் வேலன் புகழ்சொலே நாளும்
விள்பவர்க் கிணையெது சொல்லே
ஞானம் வழங்கு நல்லாசான்
நாதன் வணங்கு மேரகத்தான்அங்கிசேர் பொறியா முக்கண்
அங்கிசேர் சான விக்கண்
தங்குசீர் கிரண மாறுஞ்
சண்முகத் தேவாய்த் தோன்று
மங்குதீர் நிச்ச லன்றன்
வைபவ மேத்தும் பூசை
கொங்குதேர் வேட மங்கை
கோதமி புகழென் றாமே
ஏழ்கடன் மணலை யெண்ணு
மேதமாங் கட்சித் தேர்வு
பாழ்கடன் மூழ்கும் வாழ்வுஎன்னை வழிநடத்த வென்னை யுடனிருக்க
வென்ன விடையூ றெழநினைக்கு - முன்னைகனிதரு சுவையோ கவிதரு மகிழ்வோ கடும்வெயில் பின்வரு மழையோ பனிதரு நிலவின் பதைவழி யொளியோ படர்ந்தொளிர் பால்வெளி யழகோ சுனைதரு மண...