சூதிற் றோற்றநல் லைவரின்
சோர்வ கற்றிய வார்சகன்
தூதிற் சென்றனன் மீள்கொளத்
தோற்ற விடங்களை யாயினும்
வாதிற் றீயவர் மாய்வுற
வாக்க ளித்தனன் சகிக்கவன்
யாது மறிந்தவன் சித்தமே
யடியர்க் கேற்றமென் றென்றுமே
சூதிற் றோற்றநல் லைவரின்
சோர்வ கற்றிய வார்சகன்
தூதிற் சென்றனன் மீள்கொளத்
தோற்ற விடங்களை யாயினும்
வாதிற் றீயவர் மாய்வுற
வாக்க ளித்தனன் சகிக்கவன்
யாது மறிந்தவன் சித்தமே
யடியர்க் கேற்றமென் றென்றுமே
கருவைக் கொல்லுங் கணையி னின்று
காக்குங் கதிர்மறைத்துப்
பொருவில் சொல்லைப் பொய்யா திருக்கப்
போற்று மாழியனை
உருவி லருவி லுணர்வா லுடலா
லுணரு மடியர்தமை
இரவும் பகலு மிமையா தேத்து
மிசைவைக் கொண்மனனே
அமரரின் றுயரற வழிசெயு
மருமறை யனுதினந் துதிசெயும்
இமயமுங் குமரியுந் தனதெனு
மிணையிலி திருவிடந் துதிசெயும்
உமையொரு பங்கனும் விழிகொள
வுலகினில் வரவழை குழந்தையின்
சுமையறு கதிதரு திருவடி
தொழுவரைத் துதிசெய விழைவமே
கடலாழ மீட்டுமைந்தன் கல்விதந்த வாசாற்குக்
கடன டைத்தாய்
விடையேழைச் சென்றடக்கி விருப்பத்தின் மணமகளை
வென்று வந்தாய்
தொடைதாக்க வீமற்குச் சொல்லுரைத்துச் சுயோதனற்குத்
தோல்வி தந்தாய்
படிமீதுன் புகழாரம் பறைசாற்றுஞ் செந்தமிழ்க்கே
பணிவீ தேவே
வெண்ணெய் திருடுஞ் சிறுபிளையா
வேள்விப் பயனாம் பரம்பொருளா
பெண்ணை மயக்கும் பாலகனா
பேய்முலை யுண்ட கோமகனா
மண்ணை விழுங்கு மாதவனா
மாபோர் வென்ற சாரதியா
கண்ணின் மணியா நிற்பவனே
கண்ணா யாவு மானவனே
கார்முகில் வண்ணன் மீது
காதலில் வீழ்ந்த பெண்கள்
நீர்முக மாடி நிற்க
நேர்த்தியாய்க் கவர்ந்தா னாடை
சீர்தரு மொப்ப டைப்பைத்
தேர்முகங் கொண்டா னேனோ
ஓர்புக னீயென் பார்க்கே
யுடையுளஞ் சேர்த்தீ தற்கே
சித்திரை பிறந்து புத்தாண் டொளிரச்
சூதிற் றோற்றநல் லைவரின் சோர்வ கற்றிய வார்சகன் தூதிற் சென்றனன் மீள்கொளத் தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற ...