காதன் மலர்ந்தது கனிந்தன காண்பவை
காழ்ப்பெனுங் கருத்திலை நெஞ்சினிலே
மோதன் மறந்தது மூள்பகை மறைந்தது
முகிழ்நகை வளர்ந்தது வாழ்வினிலே
ஈதல் வளர்ந்துபின் இகழ்புகழ் ஒன்றின
இறையொளி நிலைத்தது மனவானில்
சாதல் ஒழிந்தது தான்றன தழிந்தது
தனிப்பெருங் கருணையின் வடிவமைவே