ஞாயிறு, 31 மே, 2026

அடிமுடி எழுசீர் மண்டிலம்

விளம் மா விளம் மா 

   விளம் விளம் மா  

அடிமுடி யறியா வயனரிக் கன்றோ 

      ரனற்பிழம் பெனவுருக் கொண்டோய்

கடிமலர்க் கஞ்சன் பொய்யுரை செய்யக் 
  
       கடிதவ னொருசிரங் கொய்தோய்
 
நெடியனி னுண்மை நெகிழ்த்திய துன்னை 

         நினதரு ணிறைமழை பொழிந்தோய்

பொடியனுக் கெந்தப் புனிதமு மில்லை 

          பொறுத்தருள் புனலணி பரமே 

சனி, 30 மே, 2026

கற்றைச் சடை எழுசீர் மண்டிலம்


கற்றைச் சடைபணி கொன்றை மதிநதி 
        கட்டும் பரமனி னிடப்பாகம்
பற்றக் கரையினில் வெள்ளம் பெருத்தெழப் 
        பற்றித் தழுவிய மடவாடன்
கற்றி னளிமிகு மிற்றைத் தினத்துளக் 
       கட்டை யவிழ்த்தெழப் பெறுவேமோ
குற்றத் தவுணரின் கொற்றத் தடக்கிடக் 
      குன்றைப் பொடிசெய்த பெருமாளே

வியாழன், 28 மே, 2026

தோழி இல்லை என்று எழு சீர் மண்டிலம்

 தோழி யில்லையென் றேங்கு மாந்தரே 

        சூழு மாயையைக் காண்கிலீர்

தோழி வந்தபின் வாழ்வி னிம்மதி 

        தூச தாவதைக் காண்குவீ

ரேழை யாகுவீர் பாழில் வாழுவீர் 
 
      யாண்டும் வேண்டுவீர் முன்னிலை
 
யாழி போன்றவ ளாழ மெண்ணுவோ 

      ரான்ம சிந்தனை யாள்வரே

வேழ மாமுகன் எழு சீர் மண்டிலம் (சந்தம்)

 வேழ மாமுகன் வீழ நின்றனை 

          வேடர் மாதிளை சேரவும்

வேழ மாவுரு பூண்டு வந்தனை 
      
         மீன லோசினி மைந்தனே
 
ஆழி கவ்வியன் றாட வைத்தனை 
     
         யாட னாயகன் மைந்தனே

வாழி வாழியென் றுன்னை யேத்தவே 

        வாழ்வி லின்பமா மென்றுமே


தேம கூவிளம் தேம கூவிளம் 
       தேம கூவிளம்  கூவிளம் 

செவ்வாய், 26 மே, 2026

அருக்கனென அருளும் எழுசீர் மண்டிலம்

அருக்கனென வருளுங் கடைக்கண்க

ளன்பர்க் களவிலா தீயு மதுமாந்

திருக்கரங்கட் சூரன் செருக்கொழிக்குஞ் செவ்வேற்
றெய்வானை வள்ளி யணைப்பின்
விருப்பத்துச் சிவந்த திருமேனிப் பொழுதின்
விரைந்தோடு மயின்மீ தூர்வான்
றிருவடிகள் சேரச் சிந்தனைசெய் நெஞ்சே
திரும்பாது பிறவிச் சுழலே

பிறந்தான் பிறப்பிலான் எழுசீர் மண்டிலம்

 பிறந்தான் பிறப்பிலான் பிறழுயிர் படுசுழற்

பிணியறுத் தணைக்க மிகுத்தவன்பாற்

றுறந்தான் கயிலைவாழ் நித்திய மாண்டியாய்ச்

சுடரொளி வீசுநல் லாறானான்

மறந்தான் பத்தர்தங் குறைச்செய லருடர
மலையெலாந் தனதென வாட்கொண்டு
நிறைந்தான் வேறொடு காவலன் மனத்தொரு
நிலைநிறுத் தன்பர்த நினைவினிலே

வெள்ளி, 15 மே, 2026

உண்மை வடிவாய் எழுசீர் மண்டிலம்

 உண்மை வடிவா யுலகி னின்றா

னூழின் வலியைத் தணிப்பான்

கண்மை வண்ணன் காத லாயர்
கண்ணன் பகையைக் காய்வா
னண்மை விழைவோர்க் கன்பின் வடிவ
னாசா னானான் போரிற்
றிண்மை விழைவோர்க் கருச்சை வடிவாய்ச்
சேவை புரிவான் சிறப்பே

அடிமுடி எழுசீர் மண்டிலம்

விளம் மா விளம் மா     விளம் விளம் மா    அடிமுடி யறியா வயனரிக் கன்றோ        ரனற்பிழம் பெனவுருக் கொண்டோய் கடிமலர்க் கஞ்சன் பொய்யுரை செய்யக்   ...