பாலனாய் நின்ற பராசத்தி மைந்தனே
யாலவா யண்ணற்கு மாசானாம் - வேலனாய்
ஞாலமீ டேவர்க்கு நல்கு
பாலனாய் நின்ற பராசத்தி மைந்தனே
யாலவா யண்ணற்கு மாசானாம் - வேலனாய்
ஞாலமீ டேவர்க்கு நல்கு
கற்பனைக் கெட்டாக் கருவுரு கந்தன்றன் பொற்பதம் பற்றப் புனைகவிதை யாறனைய வற்பற்குந் தோன்று மகத்து
இணக்கமென் றென்று மியல்பினை விட்டுத்
தணிக்கவே சற்றும் பணியாதே யோம்பு
குணக்கடல் கூறா யகம்
கற்பனைக் கெட்டா கருவுருநீ ஞானத்தா லற்பனுக் கெட்டா தமைகுவையோ- சொற்பமுன்ற னின்னருள் சொட்ட விசைத்தமிழ் ஞானமெலாந் தன்னரு ளாகுந் தகை
எந்தை முருகனை யேற்ற தமிழ்பாடிச்
சிந்தைமகிழ் பூசைசெய்து சேர்வனே யூமையற்குஞ்
செந்தமிழ்ச் செப்பீத லான்
மதிவா ணுதலு மலர்விழியுஞ் சற்று
முதிரா குழலு மொளிரெயிறுங் கொவ்வை
யிதழு யிளமுலையுங் காணா ரிழந்தார்
மதிமருட்டு மிம்மா மயக்கு
மதிசூடு மாதவனின் மாண்புணர்ந்து செய்ய
துதிசூடு சொன்மாலை சாற்ற - விதிசூழும்
பாழ்வாழ்வின் பற்றகலு மிந்நாளி லுண்முகத்து
வாழ்வாய வீழு மயக்கு
பாலனாய் நின்ற பராசத்தி மைந்தனே யாலவா யண்ணற்கு மாசானாம் - வேலனாய் ஞாலமீ டேவர்க்கு நல்கு