1நேயத்தே நின்ற நிமலனைக் காயத்தே
காண்பார்க்கு வீடா முலகு
உயிர்வலி நீக்கி யுளமகிழ் நாட்டுந்
துயரறக் காக்குஞ் சுடரா - முயர்வாம்கடலோரக் காற்றிற் கசிந்துவரு நீரா
யுடலுள்ளஞ் சிந்தை யுனதாய் - மடலேறப்பழத்தின் பொருட்டுப் பழனி யமர்ந்த பரம்பொருளைக்
கிழத்தி னுருவிற் கெழீஇய நட்பின் கரம்பிடித்தஎன்னை மறந்த நிலைவரினும்
யாவு மிழந்த நிலைவரினும்
நின்னை மறந்த நிலைவருமோ
நீத மறந்து மதைவிழையேன் ஒருநாளும்
பொன்னை யடைந்த திருடனெனப்
பூரிப் படைந்து நினதடியைப்
போற்றி நினைந்து மனமகிழப்
பொய்யை விடுத்து நினதருளால் புகலேனோ
பின்னை மணந்த வடிவழகன்
போரூ டுரைத்த வறிவொருவன்
கன்னங் கறுத்த முகிலனயன்
குன்றை யெடுத்த விரலழகன் மருகோனே
அன்னை அணைத்த அறுமுகவ
ஆரூ ரமர்ந்த அரசர்குரு
அஞ்சல் அழித்த அசுரநம
கொஞ்சு குறத்தி மனமகிழு பெருமாளே