யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்
மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே
செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்
சொந்தமென் றான துணிவுளதே வந்தகன
வாட்கில்லை யாவதிங் கொன்று
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்
மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே
செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்
சொந்தமென் றான துணிவுளதே வந்தகன
வாட்கில்லை யாவதிங் கொன்று
வீரா பிரசன்ன வேங்கடே சன்மருகா
சூரா சுடர்வேலா சுந்தரா -நேரில்
குணபரதக் கண்டா குணவாள் குமாரா
கணேசற் கிளையென்றே கூறு
ஓதம் பணிதுயில்வா னும்பர்நல மோயாது
வாலைசேலை நீலமூட ஞாலமாளு நாதனின்
நதியாடி வெங்கதிரோன் றோன்றுதிசை நாடித்
கான்சென்று கேளிக்கை காண வமர்ந்தூர்தி
வான்சென்று முட்டு மரத்திடை மான்சென்
றடையும் வழித்தடத் தாய்ந்து பதுங்கி
யுடைய சமையம்பார்த் தோங்கி விடையறியா
வீழ விரைபாயும் வேங்கை பலகூட்டம்
வாழ்வ தறிந்தும் மடமையாற் கீழிறங்கிக்
காணொளி செய்து கடைநாளை யீர்ப்பார்க
ளாணவத்தான் மைந்தனை யச்சுறுத்தி வாணாளைத்
தூண்பிளந்த சிங்கத் திரையாச் சுடரொழிந்த
மாண்பிலா மூடன் வகை
குயிலினங்கள் கோது கலமாகக் கூவு
மயினடிக்குங் காட்டின் மலர்மலரு மீளு
மயலிடம் பேர்ந்த வணிபறவைக் கூட்ட
மயன்மிக்க பல்லுயிர்கள் வாஞ்சையுடன் சேரு
மியற்கையெழி லோங்கு மிணையில்லாக் காலம்
வியனிள வேனிலே வா
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...