அங்கிசேர் பொறியா முக்கண்
அங்கிசேர் சான விக்கண்
தங்குசீர் கிரண மாறுஞ்
சண்முகத் தேவாய்த் தோன்று
மங்குதீர் நிச்ச லன்றன்
வைபவ மேத்தும் பூசை
கொங்குதேர் வேட மங்கை
கோதமி புகழென் றாமே
அங்கிசேர் பொறியா முக்கண்
அங்கிசேர் சான விக்கண்
தங்குசீர் கிரண மாறுஞ்
சண்முகத் தேவாய்த் தோன்று
மங்குதீர் நிச்ச லன்றன்
வைபவ மேத்தும் பூசை
கொங்குதேர் வேட மங்கை
கோதமி புகழென் றாமே
ஏழ்கடன் மணலை யெண்ணு
மேதமாங் கட்சித் தேர்வு
பாழ்கடன் மூழ்கும் வாழ்வுஎன்னை வழிநடத்த வென்னை யுடனிருக்க
வென்ன விடையூ றெழநினைக்கு - முன்னைசூதிற் றோற்றநல் லைவரின்
சோர்வ கற்றிய வார்சகன்
தூதிற் சென்றனன் மீள்கொளத்
தோற்ற விடங்களை யாயினும்
வாதிற் றீயவர் மாய்வுற
வாக்க ளித்தனன் சகிக்கவன்
யாது மறிந்தவன் சித்தமே
யடியர்க் கேற்றமென் றென்றுமே
கருவைக் கொல்லுங் கணையி னின்று
காக்குங் கதிர்மறைத்துப்
பொருவில் சொல்லைப் பொய்யா திருக்கப்
போற்று மாழியனை
உருவி லருவி லுணர்வா லுடலா
லுணரு மடியர்தமை
இரவும் பகலு மிமையா தேத்து
மிசைவைக் கொண்மனனே
அமரரின் றுயரற வழிசெயு
மருமறை யனுதினந் துதிசெயும்
இமயமுங் குமரியுந் தனதெனு
மிணையிலி திருவிடந் துதிசெயும்
உமையொரு பங்கனும் விழிகொள
வுலகினில் வரவழை குழந்தையின்
சுமையறு கதிதரு திருவடி
தொழுவரைத் துதிசெய விழைவமே
கடலாழ மீட்டுமைந்தன் கல்விதந்த வாசாற்குக்
கடன டைத்தாய்
விடையேழைச் சென்றடக்கி விருப்பத்தின் மணமகளை
வென்று வந்தாய்
தொடைதாக்க வீமற்குச் சொல்லுரைத்துச் சுயோதனற்குத்
தோல்வி தந்தாய்
படிமீதுன் புகழாரம் பறைசாற்றுஞ் செந்தமிழ்க்கே
பணிவீ தேவே
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...