விழிதருங் காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன
மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன
கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண
முழுதருங் காத லன்பை யுணராதவர் மூட ரன்றே
விழிதருங் காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன
மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன
கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண
முழுதருங் காத லன்பை யுணராதவர் மூட ரன்றே
விளம் தேம தேமா
புளிமா புளிமா புளிமா
மதுவிரிந் தாடு பூவின்
மணமோ சுவையோ மயக்கும்
மதிமறந் தாடு வண்டு
மயலின் முழுது மிழக்கும்
விதிவிரிந் தாடு போது
விழைவே விழியீ ரடைக்குங்
கதிபயந் தாள்வ னாளப்
பயன்மீ துகப்புக் கனவே
விளம் கருவிளம் கருவிளங்காய்
விளம் கருவிளம் கருவிளங்காய்
தூயவ டிருவள ருரவழகன்
முகமென முகில்வரு திருவழகை
நேயமொ டுயிரிகள் பெருமகிழ்வாய்க்
கானமொ டழைவிட நிலமகளின்
றாயுள மளிதர வடர்கடலைச்
சூலுறு தகைமையி னமைத்ததனாற்
றீயென வெரிகிற கதிரவனின்
சேயென வருகிற திருமைழையே
தனத்தினோட்ட நீங்கிடாத் தகுந்தவீகை செய்யவை
சினத்தினோட்ட மேலழா துளத்தழுக்கைத் தீர்த்திடு
வனப்பினோட்ட மாய்ந்திடா தகத்தினூற்று வாகுசெய்
மனத்தினோட்ட மாயவை மகேசன்சேய் குகேசனே
விளம் கருவிளம் கருவிளங்காய்
விளம் கருவிளம் கருவிளங்காய்
தொடர்கதை யெனவரு மிடர்கெடவுந்
துணிவுள முறுநிலை நிலைபெறவுஞ்
சுடரொளி யெனவழி தெளிவுறவுந்
துகளறு மதிவள ரளிபெறவும்
அடர்விட மிடறிடை நிலைபெறவன்
றவுணரு மமரருங் கடல்கடைநாள்
படருல குயிர்பெற வளிதருவான்
பதவிணை தொழுதெழு வினிமனனே
விளம் கருவிளம் கருவிளங்காய்
விளம் கருவிளம் கருவிளங்காய்
குலமதி னுயர்விலை மதியதிலை
கொடுமுய றவமிலை பணிவதிலை
நிலமக ளளிதரும் பொறுமையிலைமா கூவிளங்காய் மா கூவிளங்காய்
மா கூவிளங்காய் கூவிளம்
மறையும் வான்கதிரின் வண்ணந் தூரிகையின்விழிதருங் காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண ம...