அழகே யழுக்கா றுறுமழகே
அடியா லளந்தாய் மூவுலகை
கழுகே யதன்மீ தெழுமரசே
கரியி னிடர்தீர்த் தருடேவே
தொழுகே னுனைநீங் கொருவருமே
சுடரா ழிசங்கா முழுமுதல்வா
பழுதாம் வினைநீங் குயர்வுறவே
பகர்வேன் பெயரா யிரமுனதே
அழகே யழுக்கா றுறுமழகே
அடியா லளந்தாய் மூவுலகை
கழுகே யதன்மீ தெழுமரசே
கரியி னிடர்தீர்த் தருடேவே
தொழுகே னுனைநீங் கொருவருமே
சுடரா ழிசங்கா முழுமுதல்வா
பழுதாம் வினைநீங் குயர்வுறவே
பகர்வேன் பெயரா யிரமுனதே
செம்பாக நங்கைக்குத் தந்தாரின் றீவிழியி
னம்பா லுதித்த வழகுருவே - கொம்பார்அறம்சார்ந்த இல்வாழ்வில் அணிசேர விழைவோராய்
அகம்சார்ந்த உச்சம்பல அடைவோராய்
நிறமாறாப் பண்புபற்றி நல்லவையோ அல்லவையோ
நிலைமாறா துடனெதிர்கொள் நல்லோராய்
துறைசார்ந்த உயர்வெட்டித் திருவிலகா அருள்வளரத்
துணிவுடனே வருங்காலம் தழைப்போராய்
முறைசேர்ந்த தம்பதிகள் மூவுலகும் புகழ்பாட
மொழிசேர்ந்த பொருள்போல வாழியவே
விழிதருங் காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன
மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன
கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண
முழுதருங் காத லன்பை யுணராதவர் மூட ரன்றே
விளம் தேம தேமா
புளிமா புளிமா புளிமா
மதுவிரிந் தாடு பூவின்
மணமோ சுவையோ மயக்கும்
மதிமறந் தாடு வண்டு
மயலின் முழுது மிழக்கும்
விதிவிரிந் தாடு போது
விழைவே விழியீ ரடைக்குங்
கதிபயந் தாள்வ னாளப்
பயன்மீ துகப்புக் கனவே
விளம் கருவிளம் கருவிளங்காய்
விளம் கருவிளம் கருவிளங்காய்
தூயவ டிருவள ருரவழகன்
முகமென முகில்வரு திருவழகை
நேயமொ டுயிரிகள் பெருமகிழ்வாய்க்
கானமொ டழைவிட நிலமகளின்
றாயுள மளிதர வடர்கடலைச்
சூலுறு தகைமையி னமைத்ததனாற்
றீயென வெரிகிற கதிரவனின்
சேயென வருகிற திருமைழையே
தனத்தினோட்ட நீங்கிடாத் தகுந்தவீகை செய்யவை
சினத்தினோட்ட மேலழா துளத்தழுக்கைத் தீர்த்திடு
வனப்பினோட்ட மாய்ந்திடா தகத்தினூற்று வாகுசெய்
மனத்தினோட்ட மாயவை மகேசன்சேய் குகேசனே
அழகே யழுக்கா றுறுமழகே அடியா லளந்தாய் மூவுலகை கழுகே யதன்மீ தெழுமரசே கரியி னிடர்தீர்த் தருடேவே தொழுகே னுனைநீங் கொருவருமே ...