புதன், 4 பிப்ரவரி, 2026

நேயத்தே நின்ற நிமலன் குறள் வெண்பாக்கள்

1நேயத்தே நின்ற நிமலனைக் காயத்தே

காண்பார்க்கு வீடா முலகு 


மறுமையின் மலர்ந்த காதல் வெண்பா

 உயிர்வலி நீக்கி யுளமகிழ் நாட்டுந்

துயரறக் காக்குஞ் சுடரா - முயர்வாம்
பொறுமையின்பு லர்ந்தநற் பூவொளி தேனாய்
மறுமையின்ம லர்ந்தகா தல்

கடலோர வெண்பா - பிரிவு

 கடலோரக் காற்றிற் கசிந்துவரு நீரா

யுடலுள்ளஞ் சிந்தை யுனதாய் - மடலேறப்
பார்த்து மறுத்தேன் மதிதழுவ வாராயோ
காத்திருக்கேன் கார்த்திகே யா

பழத்தின் பொருட்டுக் கட்டளைக் கலித்துறை - செவ்வாயிற் செவ்வேள்

 பழத்தின் பொருட்டுப் பழனி யமர்ந்த பரம்பொருளைக்

கிழத்தி னுருவிற் கெழீஇய நட்பின் கரம்பிடித்த
கழுத்தின் கறுத்தர் குருவாய்ச் செவியுரை யேரகனே
வழுத்தின் முறையே வழுவாத் தமிழ்செய் வகையளியே

அறம் குறள் வெண்பாக்கள்

அறத்தின் வழிநடந் தாற்றுஞ் செயலே

நிறைத்த வகத்தைத் தரும்


அகக்குறள் வெண்பாக்கள்

விழிமொழியு மேன்மை விழைந்துவந்தார்  வேண்டார்

மொழிமொழியு முற்றா முறை


புதன், 28 ஜனவரி, 2026

என்னை மறந்த விருத்தம்

 என்னை மறந்த நிலைவரினும்

     யாவு மிழந்த நிலைவரினும்

நின்னை மறந்த நிலைவருமோ

    நீத மறந்து மதைவிழையேன்           ஒருநாளும் 


பொன்னை யடைந்த திருடனெனப்

   பூரிப் படைந்து நினதடியைப்

போற்றி நினைந்து மனமகிழப்

    பொய்யை விடுத்து நினதருளால்      புகலேனோ


பின்னை மணந்த வடிவழகன்

    போரூ டுரைத்த வறிவொருவன் 

கன்னங் கறுத்த முகிலனயன்

     குன்றை யெடுத்த விரலழகன்             மருகோனே 


அன்னை அணைத்த அறுமுகவ 

     ஆரூ ரமர்ந்த அரசர்குரு

அஞ்சல் அழித்த அசுரநம

    கொஞ்சு குறத்தி மனமகிழு                  பெருமாளே 


நேயத்தே நின்ற நிமலன் குறள் வெண்பாக்கள்

1 நேயத்தே நின்ற நிமலனைக் காயத்தே காண்பார்க்கு வீடா முலகு