காலாட் படையாகும் கட்டக் களியின் உயிரனைய
மாலாட் படுத்தும் மனது மயங்கிப் பலகணக்கில்
தாலாட்டுப் போன்றெளி தன்றே சமனிலை காத்திருத்தல்
வேலட்டு மாயும் அரசியோ தேரோ விதிவகையே
காலாட் படையாகும் கட்டக் களியின் உயிரனைய
மாலாட் படுத்தும் மனது மயங்கிப் பலகணக்கில்
தாலாட்டுப் போன்றெளி தன்றே சமனிலை காத்திருத்தல்
வேலட்டு மாயும் அரசியோ தேரோ விதிவகையே
வாழ்வைத் தொலைத்து வளரப் பொருளீட்ட
றாழ்வைத் தரவிருக்கச் சார்வேனோ வூழ்வினையா
னிற்கும் பொருளதுவே நிற்குமெனுஞ் சான்றோர்சொல்
கற்கும் வழக்குக் கரந்ததுவோ பொற்குவியல்
வீணா மொருநா ளதனான் மெலிந்துவரும்
வாணாண் முடியுமுனே மைவளருங் காணாக
கண்டத்தர் காறொழலே நன்று
சூரன்வீழ வேலெறிந்த தோகைநாதன் வீரமோ
மாரன்வீழ வடிவுடைத்த மாலுணர்த்து கோலமோ
பாரின்வீழ்ந்த வுயிர்களுய்யப் பற்றறுக்குங் கருணையோ
வோரின்வாழ்வி லோங்குமத்த மூப்பிலாத மூலனே
சூரனை வீழ்த்திச் சுரருலுக மீடரப்
போரினிற் புன்னகைத்த வென்றியான் - மாரனை
வீழ்த்தும் வடிவுடைய வேலன் மயலதனி
லாழ்த்த வணங்கிவளை யாள்
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்
மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே
செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்
சொந்தமென் றான துணிவுளதே வந்தகன
வாட்கில்லை யாவதிங் கொன்று
வீரா பிரசன்ன வேங்கடே சன்மருகா
சூரா சுடர்வேலா சுந்தரா -நேரில்
குணபரதக் கண்டா குணவாள் குமாரா
கணேசற் கிளையென்றே கூறு
ஓதம் பணிதுயில்வா னும்பர்நல மோயாது
காலாட் படையாகும் கட்டக் களியின் உயிரனைய மாலாட் படுத்தும் மனது மயங்கிப் பலகணக்கில் தாலாட்டுப் போன்றெளி தன்றே சமனிலை காத்திருத்தல் வேலட்டு ...