தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று
மன்னன் வருவான் மணவாளன்
மாலை மார்பன் வடிவேலன்
தென்னன் றிருவாஞ் செந்தமிழின்
சிதையாச் சீராஞ் சிறுபாலன்
நன்னெறி ஞானர் நசையாகு
நான்கு நவிலு நதிபாலன்
என்னை யிணைய வென்றெண்ணி
யிமையா திழந்தே னிளமையையே
தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று
மன்னன் வருவான் மணவாளன்
மாலை மார்பன் வடிவேலன்
தென்னன் றிருவாஞ் செந்தமிழின்
சிதையாச் சீராஞ் சிறுபாலன்
நன்னெறி ஞானர் நசையாகு
நான்கு நவிலு நதிபாலன்
என்னை யிணைய வென்றெண்ணி
யிமையா திழந்தே னிளமையையே
மாலின் மருகோனே குறவள்ளி மணவாளா
வானின் குலமீள மலைசாடு கதிர்வேலாபோர்நடத்த வாயுதங்க டேவையில்லை புன்னகை
சீர்நடத்து கீதைசொன்ன தேவதேவ னாயினும்
தேர்நடத்து பாகனாய்த் திறந்தமேனி புண்களைப்
பார்நடத்த வின்றுமேந்து கேணியாளு பரமனே
சென்றுதித்துத் தூணிலே சிறுவன்வாழப் பண்டுநாள்
வென்றவேந்த கந்தையை யுகிர்த்தெறிந்து வந்தனை
யன்றுதோன்றி யன்றளிக்கு மாளரிக்கு மேலொரு
வின்றுமன்று மென்றுங்கூற வீரமாளு தேவெதோ
அழகே யழுக்கா றுறுமழகே
அடியா லளந்தாய் மூவுலகை
கழுகே யதன்மீ தெழுமரசே
கரியி னிடர்தீர்த் தருடேவே
தொழுகே னுனைநீங் கொருவருமே
சுடரா ழிசங்கா முழுமுதல்வா
பழுதாம் வினைநீங் குயர்வுறவே
பகர்வேன் பெயரா யிரமுனதே
செம்பாக நங்கைக்குத் தந்தாரின் றீவிழியி
னம்பா லுதித்த வழகுருவே - கொம்பார்தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று மன்னன் வருவான் மணவாளன் மாலை மார்பன் வடிவேலன் தென்னன் றிருவாஞ் செந்தமிழின் ...