மன்றாடி போற்று மகவாகி யன்னை
வரைமக டந்தவேல் வாங்கி யவுணர்
குன்றாடப் போர்செய்து வானவர் மீளக்
குலங்காத்துக் குஞ்சர தேவி மணந்து
சென்றாடிக் கானக் குறத்தி காதல்
சிறக்கக் களவா டறுமுகத் தாளுங்
குன்றாடி யென்றாடி வெளுக்குமுன் வாராய்
குடிகொள்ள வென்னெஞக் கற்கோவிற் கண்ணே