செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

உயிரில் உறையும் அறு சீர் மண்டிலம் (பெருமாள்)

 உயிரி லுறையு முறுபொருளே 

       யுளத்து ளொளியா யொளிபவனே

மயர்வை யறுக்கு முழுமுதலே 
  
     மதியா லறிய வரும்பொருளே
 
துயில்கொள் கோல மாள்பவனே 

     துதியார் தமிழை யுகப்பவனே
 
மயல்சேர் மாயைக் கதிபதியே 

      வடிவார் திருசேர் நிறத்தவனே

உய்வனோ அறு சீர் மண்டிலம் (செவ்வாயிற் செவ்வேள்)

உய்வனோ வொருநாள் வாழ்வி 
      லுனகழ லிறுகப் பற்றி
மெய்வினை நோய்தான் றீர்ந்து 
     வேற்றுமை யெண்ண நீங்கிப்
பொய்விளை யாட்டின் மீண்டு 
     புன்னெறி முழுது விட்டு
மைவரை யாளுந் தேவே 
     வைவளர் தமிழின் வேந்தே

சனி, 22 ஆகஸ்ட், 2026

மார்பிருந்து எழு சீர் மண்டிலம் (சந்தம்)

 மார்பி ருந்து மன்ன னுக்கு மங்க ளங்க ளீபவள் 

சார்பி ருந்து சீவ னுக்கு வீடு பேறு தருபவள் 

போர்பு ரிந்து வெல்வ ளல்லள் புன்சி ரித்து வெல்பவ

ணீர்பி றந்த தாயி னீர்மை யெண்ணொ ணாத நீர்மையே 

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

வேலை மறந்தாலும் (செவ்வாயிற் செவ்வேள் வெண்பா)

வேலை மறந்தாலும் வேலை மறவேன்யான்

வேளை மறந்தாலும் வேளை மறவேன்யான்
காலை மறந்தாலுங் காலை மறவேன்யான்
கோலக் குறத்தியின் வேந்து

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

ஆடிப் பூரத் தவதரித்தாள் அறுசீர் விருத்தம்

 ஆடிப் பூரத் தவதரத்தா

ளாவி முழுது மாற்களித்தாள்

பாடிக் களிக்கப் பாவைதனைப்
பாருக் களித்த பல்வளையா
ணாடித் தவிப்பி னயந்துரைத்தா
ணாதற் காகத் திருமொழியைச்
சூடிக் கொடுத்த சுடர்கொடிதான்
பாரா ணீளை திருமகளே

மறந்தும் மறவாதிருக்க வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

மறந்து மறவா திருக்க மனத்தாண்

மறச்சிறுமி நாதா மயிலே -றறுமுகா
செந்தமிழாற் சீருரைத்துச் செவ்வேளுன் றாள்பணிய
முந்துவினை மூளா தொழி

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

அறுவர் பயந்த வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 அறுவர் பயந்த வறுமுகனை யெண்ண

மறுமையு மிம்மையும் வாய்க்கும் - வெறுமையுந்
துன்பமும் விட்டோடுந் தொய்விலா ஞானமு
மன்பு மலரு மழகு

உயிரில் உறையும் அறு சீர் மண்டிலம் (பெருமாள்)

 உயிரி லுறையு முறுபொருளே         யுளத்து ளொளியா யொளிபவனே மயர்வை யறுக்கு முழுமுதலே          மதியா லறிய வரும்பொருளே   துயில்கொள் கோல மாள்பவனே ...