செவ்வாய், 26 மே, 2026

அருக்கனென அருளும் எழுசீர் மண்டிலம்

அருக்கனென வருளுங் கடைக்கண்க

ளன்பர்க் களவிலா தீயு மதுமாந்

திருக்கரங்கட் சூரன் செருக்கொழிக்குஞ் செவ்வேற்
றெய்வானை வள்ளி யணைப்பின்
விருப்பத்துச் சிவந்த திருமேனிப் பொழுதின்
விரைந்தோடு மயின்மீ தேறுந்
திருவடிகள் சேரச் சிந்தனைசெய் நெஞ்சே
திரும்பாது பிறவிச் சுழலே

பிறந்தான் பிறப்பிலான் எழுசீர் மண்டிலம்

 பிறந்தான் பிறப்பிலான் பிறழுயிர் படுசுழற்

பிணியறுத் தணைக்க மிகுத்தவன்பாற்

றுறந்தான் கயிலைவாழ் நித்திய மாண்டியாய்ச்

சுடரொளி வீசுநல் லாறானான்

மறந்தான் பத்தர்தங் குறைச்செய லருடர
மலையெலாந் தனதென வாட்கொண்டு
நிறைந்தான் வேறொடு காவலன் மனத்தொரு
நிலைநிறுத் தன்பர்த நினைவினிலே

வெள்ளி, 15 மே, 2026

உண்மை வடிவாய் எழுசீர் மண்டிலம்

 உண்மை வடிவா யுலகி னின்றா

னூழின் வலியைத் தணிப்பான்

கண்மை வண்ணன் காத லாயர்
கண்ணன் பகையைக் காய்வா
னண்மை விழைவோர்க் கன்பின் வடிவ
னாசா னானான் போரிற்
றிண்மை விழைவோர்க் கருச்சை வடிவாய்ச்
சேவை புரிவான் சிறப்பே

வியாழன், 14 மே, 2026

நேரம் முழுதும் எழுசீர் மண்டிலம்

நேர முழுதும் பணியி னழுந்து 

        நிலைவந் தாளும் வேளை 

பார மென்று விலக்கி வைத்துப் 

         பாரி னழகைக் கொள்ள

யாரும் விரும்பு மோய்வை நாட 

       விங்கார்க் கமையும் வாய்ப்புத்

தீராப் பிணியைத் திருத்தி யமைக்கச் 

          சிதறா துறைவாய் திருவே

செவ்வாய், 12 மே, 2026

எதிலும் இருக்கும் இறை (செவ்வாயிற் செவ்வேள்)

 காலச் சுழலில் உழலும் கருதலார்

ஓலமிட உண்மை ஒழியுமோ - வேலா
உதயம் மறைதல் ஒளியிருள் ஆளும்
எதிலும் இருக்கும் இறை

திங்கள், 11 மே, 2026

காதன் மலர்ந்தது எழு சீர் மண்டிலம்

காதன் மலர்ந்தது கனிந்தன காண்பவை 

     காழ்ப்பெனுங் கருத்திலை நெஞ்சினிலே 

மோதன் மறந்தது மூள்பகை மறைந்தது 

     முகிழ்நகை வளர்ந்தது வாழ்வினிலே 

ஈதல் வளர்ந்துபின் இகழ்புகழ் ஒன்றின 

     இறையொளி நிலைத்தது மனவானில் 

சாதல் ஒழிந்தது தான்றன தழிந்தன 

     தனிப்பெருங் கருணையின் வடிவமைவே


வியாழன், 7 மே, 2026

கனிதரு சுவையோ எழுசீர் மண்டிலம்

கனிதரு சுவையோ கவிதரு மகிழ்வோ 

       கடும்வெயில் பின்வரு மழையோ 

பனிதரு நிலவின் பதைவழி யொளியோ 

        படர்ந்தொளிர் பால்வெளி யழகோ 

சுனைதரு மணமோ சோர்வொழி யமுதோ

         துணைவரு துகளொழி திருவோ 

மனமகிழ் காதன் மாண்புரை செய்தல் 

        வைகலும் புதுமொழி வகையே 

அருக்கனென அருளும் எழுசீர் மண்டிலம்

அருக்கனென வருளுங் கடைக்கண்க ளன்பர்க் களவிலா தீயு மதுமாந் திருக்கரங்கட் சூரன் செருக்கொழிக்குஞ் செவ்வேற் றெய்வானை வள்ளி ய...