திங்கள், 11 மே, 2026

காதன் மலர்ந்தது எழு சீர் மண்டிலம்

காதன் மலர்ந்தது கனிந்தன காண்பவை 

     காழ்ப்பெனுங் கருத்திலை நெஞ்சினிலே 

மோதன் மறந்தது மூள்பகை மறைந்தது 

     முகிழ்நகை வளர்ந்தது வாழ்வினிலே 

ஈதல் வளர்ந்துபின் இகழ்புகழ் ஒன்றின 

     இறையொளி நிலைத்தது மனவானில் 

சாதல் ஒழிந்தது தான்றன தழிந்தது 

     தனிப்பெருங் கருணையின் வடிவமைவே


வியாழன், 7 மே, 2026

கனிதரு சுவையோ எழுசீர் மண்டிலம்

கனிதரு சுவையோ கவிதரு மகிழ்வோ 

       கடும்வெயில் பின்வரு மழையோ 

பனிதரு நிலவின் பதைவழி யொளியோ 

        படர்ந்தொளிர் பால்வெளி யழகோ 

சுனைதரு மணமோ சோர்வொழி யமுதோ

         துணைவரு துகளொழி திருவோ 

மனமகிழ் காதன் மாண்புரை செய்தல் 

        வைகலும் புதுமொழி வகையே 

செவ்வாய், 5 மே, 2026

அரை குறை வெண்பா(செவ்வாயிற் செவ்வேள்)

அரைகுறை ஞான மடரறி வாகும்

வரைகடந் தோங்கு மதியாய்க் - குரைகடல்
சூர்தடிந்த வேலன் றுணையிருக்க மூவுலகில்
ஆர்தடுக்க வாற்ற லுளர்

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

கண்டவர் எழுசீர் மணிடிலம்

 கண்டவர் காணத் துடிப்பவர் கந்தன் 

        காதலிற் கசிந்தவ ரவர்தந்

தொண்டவர் செல்வம் விழைபவ ரிடராற் 

         சோர்ந்தவர் செந்தமிழ் நாட்டங்

கொண்டவர் வாழ்வி னழகிய னாடுங் 

         கொற்றவர் மற்றவ ரேத்தும் 

விண்டரும் வேலன் புகழ்சொலே நாளும் 

          விள்பவர்க் கிணையெது சொல்லே 

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

ஞானம் வழங்கும் அறுசீர் மண்டிலம்

 ஞானம் வழங்கு நல்லாசான்

நாதன் வணங்கு மேரகத்தான்
வானம் வழங்கு மாமயிலான் மாலின் மருகன் செந்தூரான்
கானந் திரியுங் குறமகளைக் களவின் மணந்த தணிகேசன்
யானு முய்ய வருளளித்தான்
என்னே கருணை யெந்தைக்கே

வியாழன், 23 ஏப்ரல், 2026

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண் 

         அங்கிசேர் சான விக்கண் 

தங்குசீர் கிரண மாறுஞ் 

        சண்முகத் தேவாய்த் தோன்று 

மங்குதீர் நிச்ச லன்றன் 

       வைபவ மேத்தும் பூசை 

கொங்குதேர் வேட மங்கை 

       கோதமி புகழென் றாமே 

ஏழ்கடல் அறுசீர் மண்டிலம்

 ஏழ்கடன் மணலை யெண்ணு

மேதமாங் கட்சித் தேர்வு

பாழ்கடன் மூழ்கும் வாழ்வு
பாவிக ணாட்டை யாள

ஆழ்கட னஞ்சாய் நின்ற
தறிவிலா மக்க ளாட்சி

சூழ்கடல் பார்தா னுய்யத் துளிருமோ செங்கோ லாறே

காதன் மலர்ந்தது எழு சீர் மண்டிலம்

காதன் மலர்ந்தது கனிந்தன காண்பவை       காழ்ப்பெனுங் கருத்திலை நெஞ்சினிலே  மோதன் மறந்தது மூள்பகை மறைந்தது       முகிழ்நகை வளர்ந்தது வாழ்வினிலே...