கற்பனைக் கெட்டா கருவுரு கந்தன்றன் பொற்பதம் பற்றப் புனைகவிதை யாறனைய வற்பற்குந் தோன்று மகத்து
புதன், 18 பிப்ரவரி, 2026
இணக்கம் என்று சிந்தியல் வெண்பா
இணக்கமென் றென்று மியல்பினை விட்டுத்
தணிக்கவே சற்றும் பணியாதே யோம்பு
குணக்கடல் கூற்றா யகம்
கற்பனைக்கு எட்டா கரு உரு வெண்பா
கற்பனைக் கெட்டா கருவுருநீ ஞானத்தா லற்பனுக் கெட்டா தமைகுவையோ- சொற்பமுன்ற னின்னருள் சொட்ட விசைத்தமிழ் ஞானமெலாந் தன்னரு ளாகுந் தகை
செவ்வாய், 17 பிப்ரவரி, 2026
எந்தை முருகனை சிந்தியல் வெண்பா
எந்தை முருகனை யேற்ற தமிழ்பாடிச்
சிந்தைமகிழ் பூசைசெய்து சேர்வனே யூமையற்குஞ்
செந்தமிழ்ச் செப்பீத லான்
திங்கள், 16 பிப்ரவரி, 2026
மதிமயங்குதல் வெண்பா(அகம்)
மதிவா ணுதலு மலர்விழியுஞ் சற்று
முதிரா குழலு மொளிரெயிறுங் கொவ்வை
யிதழு யிளமுலையுங் காணா ரிழந்தார்
மதிமருட்டு மிம்மா மயக்கு
ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026
மதிசூடு வெண்பா
மதிசூடு மாதவனின் மாண்புணர்ந்து செய்ய
துதிசூடு சொன்மாலை சாற்ற - விதிசூழும்
பாழ்வாழ்வின் பற்றகலு மிந்நாளி லுண்முகத்து
வாழ்வாய வீழு மயக்கு
காலால் வெண்பா
காலாற் புவிவா னளந்தான் கதிதரு
மாலா லுயர்வார் மதிபெற்ற- நாலா
யிரம்பாடு நல்லாழ்வா ரேத்துதமிழ்ச் சொல்லே
வரம்பானால் வாழ்வாந் தலை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
கற்பனைக் கெட்டா கருவுரு கந்தன்றன் பொற்பதம் பற்றப் புனைகவிதை யாறனைய வற்பற்குந் தோன்று மகத்து
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
இரு மாதர் இத்திருவைக் காண்கிறார்கள் அதன் தாக்கமாக தமக்கிடையே இது இராமர் தான் என்று தனது கருத்தை முன்வைக்கின்றார் முதற்பெண், இரண்டாம் பெண் இ...
-
கெண்டையார் கண்ணினா ணிலவும் - சடைக் கிண்டியார் கங்கையா ளுலவும் தொண்டையா லன்றடக் கிடவும் - மதித் துண்டையார் சீர்முடிக் கரவும் மண்டையான் மா...