வந்த வினையும் வருகின் றவினையும் வீசியெறி
முந்து விரையு முகட்டைப் பிளக்கு முதுவுலகி
னுந்தி சுவற வுருமா வழிய வுமைபரிசாய்த்
தந்த வயில்வேற் சரவணன் றாளே சரணெமக்கே
வந்த வினையும் வருகின் றவினையும் வீசியெறி
முந்து விரையு முகட்டைப் பிளக்கு முதுவுலகி
னுந்தி சுவற வுருமா வழிய வுமைபரிசாய்த்
தந்த வயில்வேற் சரவணன் றாளே சரணெமக்கே
அகத்தடை வின்ப மருளினா னீச
னிகத்தடைந் தெட்டி நிறைவைப்- பகர்க்கரிய
பாதைப் பரத்தடையப் பின்பு
இருளகற்று ஞானத் திளங்கதிரா கேட்ட
பொருளளிக்குந் தீராப் புகழ்மரமா நீங்கா
தருள்சுரக்கும் வற்றா வமுதே - மருளாளு
மாந்தரக வாழ்வோ மறைப்பு
நாத்தழும் பேற நவில்வே னுனநாமஞ்
சேர்த்தாள் சிறியனையுஞ் சீர்பாதங் - கார்த்திகைக்
கன்னிவளர் கந்தா கனிந்து
பூச்சுடி யையளித்தாள் பொய்யண்டா மெய்யழகி
னாச்சியா ணல்ல தமிழ்ப்பாவை - யாய்ச்சியா
யான்றுரைத்தா ளாண்டா ளெமை
பால வடிவினன் பாங்க ளிளமகன்
கோல மயிலினன் கூர்வேலன் மூலன்
முருகன்சொன் மூவா மறை
இன்றுனதாள் போற்றி யியற்றமிழா லேத்தற்குச்
சென்றபிறப் பாற்றிய சீரென்னே செவ்வேளே
கொன்றையணி கூத்தற்கு மாசானே நன்றிசொல
நாடவறா தாசை யளி
வந்த வினையும் வருகின் றவினையும் வீசியெறி முந்து விரையு முகட்டைப் பிளக்கு முதுவுலகி னுந்தி சுவற வுருமா வழிய வுமைபரிசாய்த் தந்த வயில்வேற் சர...