இயல்பிழந்தா லில்லை யெவருக்கும் வாழ்வு
கயல்பழிக்குங் கண்ணா ரெழிலீ - செயல்பல
செய்துசீர் வாழ்ந்த சமூகஞ் செயற்கையென்னும்
பொய்துதிக்கப் போய்மாண்ட வாறு
இயல்பிழந்தா லில்லை யெவருக்கும் வாழ்வு
கயல்பழிக்குங் கண்ணா ரெழிலீ - செயல்பல
செய்துசீர் வாழ்ந்த சமூகஞ் செயற்கையென்னும்
பொய்துதிக்கப் போய்மாண்ட வாறு
நிழல்கனி வேர்தந்து நெடுங்கிளைவீ டாக்கி
யழல்கொண்டு மட்டமு தாக்கு - மெழில்மிகு
நற்றமிழ் நாட நலஞ்சேர் மரமென்ன
மற்றவர்க்காய் வாழ்வதுவே வாழ்வு
சாற்றமுதுஞ் சோறுங் கறியமுதுஞ் சார்ந்திருப்பார்
மாற்றமுதைக் கொள்வரோ வாய்ப்பிருந்து - மேற்றமிகு
தாய்மொழியின் மேன்மைநிலை தாந்தெளிய வேற்றவரின்
வாய்மொழிசொல் சார்வதுமென் மாண்பு
வீடுபெற வேண்டினும் வாழ்வை விழையினுந்
தேடியருள் வள்ளிமலைச் சீருரைப்போம் - வேடர்
மடந்தை யுவந்து மணந்த கடம்ப
னடந்த சிலம்பை நயந்து
ஆலால முண்டா னலுதித் தடைந்தாறு
வேலாலே வென்றான் விதிசிறைத்தான் - பாலாழிஅரியருளை நாடி யழுத குருகூர்க்
குருவருளை நாடிக் குறையி னொருகூறு
மண்டாது மண்வாழ வந்தாரி னம்பாவை
விண்டா ருளம்வாழும் விண்
குருபத்தி கொண்டாள் கொடுத்த கனியை
யரிபற்றி யன்றுவந் துண்டான் - குருபத்திக்
கேற்றமரி பத்தியின்மே லென்று தெளிவுறச்
சாற்றச் சவரியே சான்று
இயல்பிழந்தா லில்லை யெவருக்கும் வாழ்வு கயல்பழிக்குங் கண்ணா ரெழிலீ - செயல்பல செய்துசீர் வாழ்ந்த சமூகஞ் செயற்கையென்னும் பொய்துதிக்கப் போய்மாண்...