வேலை பாம்பணை யறிதுயி லிருந்தும்
வேலை சொல்லின் மிக்கள விருந்து
மானைத் துயரை யத்துளி யழித்த
மாலைத் தொழுநற் சோலை நாடர்
மாலே செயினு மாலை தருவார்
மாலை வெம்மை மறையச் செய்யு
மனந்தள ராதே மான்விழி மாதே
வேலை பாம்பணை யறிதுயி லிருந்தும்
வேலை சொல்லின் மிக்கள விருந்து
மானைத் துயரை யத்துளி யழித்த
மாலைத் தொழுநற் சோலை நாடர்
மாலே செயினு மாலை தருவார்
மாலை வெம்மை மறையச் செய்யு
மனந்தள ராதே மான்விழி மாதே
வாகை சூடு வையக் கோனே
தோகை சூடு தூயாள் கேள்வ
வூழி முதல்வ வாழி துயில்வ
வுனக்கு மொருகுறை யுரைப்பேன் கேளா
யடிமை செயலுனக் கறவே யிலையே
நுண்மை தேடி நுண்மை தேடி
யண்மை நிற்கு முண்மை காணீர்
பெண்டிர் நல்கு மின்பமு மின்று
கண்டீர் கண்டீர் கருவியி னூடே
ஈசன் மீது நேசம் வைப்பார்
ஞானத் தடைவி னாட்டங் கொள்வார்
செய்யுந் தொழிலே தெய்வ மென்பா
ருய்யு மாறு மவனே யென்பார்க்
கோச்சி நின்று மொப்பா வாரே
மாந்தர் சொல்லும் பொய்யா வாழ்வு
வேந்தரைப் பணியும் வீழ்வா வாழ்வு
சேந்தனைப் பணியும் சித்தே வாழ்வு
சாந்துணைப் பொழுதுஞ் சலன மற்றே
மானுட முண்டோ மாந்தர்க் கவர்த
மூனுடம் பொன்றே யுயர்வாய்க் கொள்வர்
பசித்தா லன்றிப் பாய்ந்து கொல்லற்
கறிவைந் துடையன பிறவுயிர் நாடா
வாறா மறிவைத் தேறா வறிவாய்த்
தன்னல மொன்றே யெண்ணத் தாஅண்
டின்னல் செய்து மண்ணுயு ரழிக்கு
மாந்தர்க் கையோ மானுடங் குறையே
மயிலாய்த் தாங்க வுயர்பே றில்லை
யயிலா யோங்க வருளீங் கில்லை
சேவற் கொடியாந் திருவு மில்லை
யாயினுந் தாயாய் வேளே
யோய்விலா துனபுக ழொலிக்குஞ்
செந்தமிழ்ச் செல்வஞ் செவிக்கீந் தனையே
வேலை பாம்பணை யறிதுயி லிருந்தும் வேலை சொல்லின் மிக்கள விருந்து மானைத் துயரை யத்துளி யழித்த மாலைத் தொழுநற் சோலை நாடர் மாலே செயினு மாலை தருவா...