என்னை மறந்த நிலைவரினும்
யாவு மிழந்த நிலைவரினும்
நின்னை மறந்த நிலைவருமோ
நீத மறந்து மதைவிழையேன் ஒருநாளும்
பொன்னை யடைந்த திருடனெனப்
பூரிப் படைந்து நினதடியைப்
போற்றி நினைந்து மனமகிழப்
பொய்யை விடுத்து நினதருளால் புகலேனோ
பின்னை மணந்த வடிவழகன்
போரூ டுரைத்த வறிவொருவன்
கன்னங் கறுத்த முகிலனயன்
குன்றை யெடுத்த விரலழகன் மருகோனே
அன்னை அணைத்த அறுமுகவ
ஆரூ ரமர்ந்த அரசர்குரு
அஞ்சல் அழித்த அசுரநம
கொஞ்சு குறத்தி மனமகிழு பெருமாளே