இடைவிடா தேக்க நிலைமறக்கு மேதங்
கொடையென்பர் கொண்டார் குறிப்பிற் - கடைகாணிற்
காதல் கடவுளுக் கொப்பு
இடைவிடா தேக்க நிலைமறக்கு மேதங்
கொடையென்பர் கொண்டார் குறிப்பிற் - கடைகாணிற்
காதல் கடவுளுக் கொப்பு
உரலோ டொடுங்க வுடன்படுவான் குன்றை
விரலோ டெடுத்த விறலான் - கருவங்
கடந்தன் பளிப்பவர் கட்கு
வந்த வினையும் வருகின் றவினையும் வீசியெறி
முந்து விரையு முகட்டைப் பிளக்கு முதுவுலகி
னுந்தி சுவற வுருமா வழிய வுமைபரிசாய்த்
தந்த வயில்வேற் சரவணன் றாளே சரணெமக்கே
அகத்தடை வின்ப மருளினா னீச
னிகத்தடைந் தெட்டி நிறைவைப்- பகர்க்கரிய
பாதைப் பரத்தடையப் பின்பு
இருளகற்று ஞானத் திளங்கதிரா கேட்ட
பொருளளிக்குந் தீராப் புகழ்மரமா நீங்கா
தருள்சுரக்கும் வற்றா வமுதே - மருளாளு
மாந்தரக வாழ்வோ மறைப்பு
நாத்தழும் பேற நவில்வே னுனநாமஞ்
சேர்த்தாள் சிறியனையுஞ் சீர்பாதங் - கார்த்திகைக்
கன்னிவளர் கந்தா கனிந்து
பூச்சுடி யையளித்தாள் பொய்யண்டா மெய்யழகி
னாச்சியா ணல்ல தமிழ்ப்பாவை - யாய்ச்சியா
யான்றுரைத்தா ளாண்டா ளெமை
இடைவிடா தேக்க நிலைமறக்கு மேதங் கொடையென்பர் கொண்டார் குறிப்பிற் - கடைகாணிற் காதல் கடவுளுக் கொப்பு