மாந்தர் சொல்லும் பொய்யா வாழ்வு
வேந்தரைப் பணியும் வீழ்வா வாழ்வு
சேந்தனைப் பணியும் சித்தே வாழ்வு
சாந்துணைப் பொழுதுஞ் சலன மற்றே
மாந்தர் சொல்லும் பொய்யா வாழ்வு
வேந்தரைப் பணியும் வீழ்வா வாழ்வு
சேந்தனைப் பணியும் சித்தே வாழ்வு
சாந்துணைப் பொழுதுஞ் சலன மற்றே
மானுட முண்டோ மாந்தர்க் கவர்த
மூனுடம் பொன்றே யுயர்வாய்க் கொள்வர்
பசித்தா லன்றிப் பாய்ந்து கொல்லற்
கறிவைந் துடையன பிறவுயிர் நாடா
வாறா மறிவைத் தேறா வறிவாய்த்
தன்னல மொன்றே யெண்ணத் தாஅண்
டின்னல் செய்து மண்ணுயு ரழிக்கு
மாந்தர்க் கையோ மானுடங் குறையே
மயிலாய்த் தாங்க வுயர்பே றில்லை
யயிலா யோங்க வருளீங் கில்லை
சேவற் கொடியாந் திருவு மில்லை
யாயினுந் தாயாய் வேளே
யோய்விலா துனபுக ழொலிக்குஞ்
செந்தமிழ்ச் செல்வஞ் செவிக்கீந் தனையே
கார்சூழ் வானங் கடுங்கோ டைக்கண்
ஆர்த்தெழு மிடியுட னச்சத் தூட்டினு
மழைபெய் தாட்கொளும் வகையாய்
முயக்கம் பயக்கு மூடலு முறையே
நிரப்பப் பல்பொரு ணிரப்பு நீங்குமா
விரப்ப வாழ்வென் றிருந்துமென்
வையமே வீடா வீற்றிருப் பார்க்கே
அடிமையாய் நண்பனா யன்பனாய்க் கொடியா
யூர்தியாய்க் குடையாய்த் தூதனா யரியா
சனமா யருமருத் துவனாய்த் தளராஅலையாய்ப் பாயுங் கலையாங் காத
லிலைமூடு பனிக்கு முலைமூடு மைக்கு
மிகலாய்த் தோன்று பகல
புகழ்வா ருன்னைப் புல்லா தாரே
மாந்தர் சொல்லும் பொய்யா வாழ்வு வேந்தரைப் பணியும் வீழ்வா வாழ்வு சேந்தனைப் பணியும் சித்தே வாழ்வு சாந்துணைப் பொழுதுஞ் சலன மற்றே