அரியருளை நாடி யழுத குருகூர்க்
குருவருளை நாடிக் குறையி னொருகூறு
மண்டாது மண்வாழ வந்தாரி னம்பாவை
விண்டா ருளம்வாழும் விண்
அரியருளை நாடி யழுத குருகூர்க்
குருவருளை நாடிக் குறையி னொருகூறு
மண்டாது மண்வாழ வந்தாரி னம்பாவை
விண்டா ருளம்வாழும் விண்
குருபத்தி கொண்டாள் கொடுத்த கனியை
யரிபற்றி யன்றுவந் துண்டான் - குருபத்திக்
கேற்றமரி பத்தியின்மே லென்று தெளிவுறச்
சாற்றச் சவரியே சான்று
கனியுண்டு தந்தாள் கனிவான பத்திக்
கினிதுண் டிசைந்தா னிறைவன் - மனதண்டா
தாணவத்தை யாடவத்தி னாறகற்று தூயருக்கு
மாணளிக்க நாவிசைக்கும் வான்
உறக்கத்து முன்பே ருரைக்கின்றாள் பேதை
மறக்க வழியின்றி மாலி - லுறங்குதியோ
பாலாழி பாம்பணையு மாலேயுன் பித்தையிவ
ணூலாக நொந்துழலல் கண்டு
காலாட் படையாகும் கட்டக் களியின் உயிரனைய
மாலாட் படுத்தும் மனது மயங்கிப் பலகணக்கில்
தாலாட்டுப் போன்றெளி தன்றே சமனிலை காத்திருத்தல்
வேலட்டு மாயும் அரசியோ தேரோ விதிவகையே
வாழ்வைத் தொலைத்து வளரப் பொருளீட்ட
றாழ்வைத் தரவிருக்கச் சார்வேனோ வூழ்வினையா
னிற்கும் பொருளதுவே நிற்குமெனுஞ் சான்றோர்சொல்
கற்கும் வழக்குக் கரந்ததுவோ பொற்குவியல்
வீணா மொருநா ளதனான் மெலிந்துவரும்
வாணாண் முடியுமுனே மைவளருங் காணாக
கண்டத்தர் காறொழலே நன்று
சூரன்வீழ வேலெறிந்த தோகைநாதன் வீரமோ
மாரன்வீழ வடிவுடைத்த மாலுணர்த்து கோலமோ
பாரின்வீழ்ந்த வுயிர்களுய்யப் பற்றறுக்குங் கருணையோ
வோரின்வாழ்வி லோங்குமத்த மூப்பிலாத மூலனே
அரியருளை நாடி யழுத குருகூர்க் குருவருளை நாடிக் குறையி னொருகூறு மண்டாது மண்வாழ வந்தாரி னம்பாவை விண்டா ருளம்வாழும் விண்