மதிசூடு மாதவனின் மாண்பை யுணர்ந்து
துதிசூடு சொன்மாலை சாற்ற - விதிசூழும்
பாழ்வாழ்வின் பற்றகலு மிந்நாளி லுண்முகத்து
வாழ்வாய வீழு மயக்கு
மதிசூடு மாதவனின் மாண்பை யுணர்ந்து
துதிசூடு சொன்மாலை சாற்ற - விதிசூழும்
பாழ்வாழ்வின் பற்றகலு மிந்நாளி லுண்முகத்து
வாழ்வாய வீழு மயக்கு
காலாற் புவிவா னளந்தான் கதிதரு
மாலா லுயர்வார் மதிபெற்ற- நாலாகாலனைக் காலா லுதைத்தான் கதிதருநாள்
காலையு மாலையு நள்ளிரவுங் கண்விழித்
தாலவா யண்ணலி னந்தமிலாக் கீர்த்தியைச்
சாலவே யெண்ண றலை
வில்லொன்று கொண்டான் வியனுலகின் மாந்தனாய்ச்
சொல்லொன்று கொண்டான் றுயரழிக்குந் தூயவளை
யில்லென்று கொண்டா னிலக்கடையு மம்பிளையா
கொல்லாமற் கொல்லுமிக் கண்
மன்றாடி மைந்தனை மாமயில் வாகனனைக்
குன்றாடு கொற்றனைக் கோட்டுருவு வேலனைச்
சென்றோடிச் சேவித்துஞ் சிந்தித்து முய்வனோ
வென்றாடி வெள்ளாமுன் யான்
வினைப்பயன் மாற்ற விழைவெனக் கில்லை
நினைத்ததி யாவு நிறைவேற வேண்டா
வுனைப்பய னென்றே யுணர்ச்சியை வெல்ல
முனைப்பினை யாண்முரு கா
அணிதிக ழாழியு மார்ப்பரி சங்கும்
பணிதுயின் மேனியும் பற்பமலர்க் கண்ணு
மணிதிகழ் மார்பின் மலர்மகளுந் தூய
குணந்திகழ் கோவின் குறி
மதிசூடு மாதவனின் மாண்பை யுணர்ந்து துதிசூடு சொன்மாலை சாற்ற - விதிசூழும் பாழ்வாழ்வின் பற்றகலு மிந்நாளி லுண்முகத்து வாழ்வாய வீழு மயக்கு