விடிய லொளியா நள்ளிரவிற்
சிறையின் மிளிர்ந்த செல்வனவன்
விதியை முடிக்க மாமனுக்கு
விளைந்தா னெட்டாம் பிள்ளையென
நொடியின் மயக்கம் வரவழைத்து
நுடங்கச் சிறைக்காப் பாளர்க
ணோவா நதியைக் கடந்தான்பி
னாயர்ப் பாடி நுழைந்திட்டு
வடிவத் தழகின் கோபியரை
வசியஞ் செய்த மதிவதனன்
வாதின் மதியின் கூர்மையினால்
வைய மீட்டா னைவர்க்குக்
கொடியோ ரழித்து நல்லாரின்
குலங்காத் தருளுச் சூளுரைத்தான்
குறைதீர்த் தருள வருமிந்நாள்
குழகன் பிறந்த வெட்டாமே