சனி, 8 ஆகஸ்ட், 2026

மன்றாடி போற்று மகவாகி எண்சீர் விருத்தம்

மன்றாடி போற்று மகவாகி யன்னை 

        வரைமக டந்தவேல் வாங்கி யவுணர் 

குன்றாடப் போர்செய்து வானவர் மீளக் 

     குலங்காத்துக் குஞ்சர தேவி மணந்து 

சென்றாடிக் கானக் குறத்தி காதல் 

     சிறக்கக் களவா டறுமுகத் தாளுங்

குன்றாடி யென்றாடி வெளுக்குமுன் வாராய் 

    குடிகொள்ள வென்னெஞக் கற்கோவிற் கண்ணே 

செங்கதிரோன் தேரோட்டி (அருணகிரி நாதர்) எண்சீர் விருத்தம்

 செங்கதிரோன் றேரோட்டி மலைபெயரி னாதர் 

       செந்தமிழாற் சேயோன்றன் புகழ்பாடு நாதர்

மங்கைவிரி வலைகடக்க வழிசொல்லு நாதர் 
    
     வாட்டமிகு வாழ்வினிக்க மந்திரஞ்சொன் னாதர்

சிங்கமுகன் சுற்றமழித் துய்வளித்த நாதர் 

     சிந்தைமகிழ்ந் துபதேசஞ் செப்புதனி மாந்தர்

தங்குதடை சற்றுமிலா தாசுகவி பொழியுஞ் 

    சந்தமிகு சீருரைக்க விவர்க்குநிக ரிவரே

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

இரைதேடி எண்சீர் மண்டிலம்

 இரைதேடிச் சென்றுவந்தேன் பசியை யாற்ற 

      வெனதுயிரைக் காணவில்லை யென்செய் வேனோ

குரைநீளு கூர்மைமிக்க வெயிற்று நாய்கள் 
    
     குறைவில்லை சுற்றமெங்கும் பதைத்தேன் யானே

யுரைதேடு மூமைபோன்று றைந்து போனே 
    
    னுயிர்மாண்ட வுடலம்போன் றியக்கம் விட்டேன்

கரைதேடு கப்பலென்னைக் காக்குஞ் சோதி 
      
     கடவுளருள் காவாக்கால் வாழேன் காணே

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

நினையொழிந்த எண்சீர் விருத்தம்

 நினையொழிந்த நேரமெலா மிருளாய் நீள 

      நிலைகுலைந்த நெஞ்சமதின் வலியு மோங்கச்

சுனையொழிந்த கயலினம்போல் சோர்வி லாழச் 

     சுயமிழந்து தத்தளிக்குஞ் சோக மூள 

வனையொழிந்த சேயினைப்போற் றிக்கற் றோட 

       வறிவிழந்து சுற்றுநிலை படிமீ தேனோ 

வெனையொழிந்து கரையுநிலை யுன்னி லென்றோ 

       விடையொழிந்த வள்ளியமை சேருங் கோவே 

செவ்வாய், 28 ஜூலை, 2026

மூவாறு கண்களும் இன்னிசை வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

மூவாறு கண்களு முத்தமிழ் மெய்யாக

மூவீ ரிருதோளு முந்து தமிழுயிராய்ச்
சேவன் மயில்வேற் சிவமைந்தன் சேவைதர
மேவுவினை யாகாதோ வீண்

சனி, 25 ஜூலை, 2026

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின்

றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை 

யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத்

தரங்கமாளு நீர்மையை வரம்புரைத்த லாகுமே 

வாடுவார்படி அறு சீர் விருத்தம்(முற்றுமோனை)

வாடு வார்படி வாழ்வெலா 

     மாது மாயமே மாய்ந்திடா 

நேடு நேர்வழி நினைவிலா 

     நீங்க நேயமே நெஞ்சினிற்  

றேடு தீர்வுக டீர்விலை 

     தெள்ளித் தெளியவே திருவரு 

ணாட நல்வழி நல்குவா 

    ஞால நாகணை நாதனே 

மன்றாடி போற்று மகவாகி எண்சீர் விருத்தம்

மன்றாடி போற்று மகவாகி யன்னை          வரைமக டந்தவேல் வாங்கி யவுணர்  குன்றாடப் போர்செய்து வானவர் மீளக்       குலங்காத்துக் குஞ்சர தேவி மணந்து ...