மங்கை மார்பகம் வாகு வாய்சுனை
வந்த வாதரும் வால்விழி
செங்கை சீர்வளை தேடு சிற்றிடை
திங்க டேர்முகஞ் செவ்விதழ்
தொங்கு தூகுழ றுஞ்சு சோர்வழி
தொய்வில் சுந்தரத் தோள்களுந்
தங்கு தாழ்மனஞ் சங்கு சக்கர
சார்ங்கன் றாளிணை சாருமே
மங்கை மார்பகம் வாகு வாய்சுனை
வந்த வாதரும் வால்விழி
செங்கை சீர்வளை தேடு சிற்றிடை
திங்க டேர்முகஞ் செவ்விதழ்
தொங்கு தூகுழ றுஞ்சு சோர்வழி
தொய்வில் சுந்தரத் தோள்களுந்
தங்கு தாழ்மனஞ் சங்கு சக்கர
சார்ங்கன் றாளிணை சாருமே
மனநிறை வனிதையின் மதுவதோ
மதிநிறை மகிழ்தரும் வடிவதோ
தனநிறை தையலின் றழைவதோ
தனிப்பெருஞ் சார்விலி தமிழதோ
நினைவொழி நெடுநிலை நெகிழ்வதோ
நிகரிலி நிலவொளி நீர்மையோ
வினையொழி வேலவன் மிகையருண்
மிகைமொழி விளம்பினும் விந்தையே
தேவை சிலவுள சிறுநசை சிலவுள
திருமணஞ் செயவிழை சேயிழையே
நாவி னவின்றெழு நயந்திகழ் நாமமு
நழுவிடை நாயகி ஞான்றுனதே
மேவு மிளிரொளி மின்னிகர் விழிப்பொலி
விழைகணை விடைபெற விழவுறவே
சேவை செயவிழை செல்வனின் சேய்மையைத்
தீர்த்தொழி திருவளர் தேவதையே
தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று
மன்னன் வருவான் மணவாளன்
மாலை மார்பன் வடிவேலன்
தென்னன் றிருவாஞ் செந்தமிழின்
சிதையாச் சீராஞ் சிறுபாலன்
நன்னெறி ஞானர் நசையாகு
நான்கு நவிலு நதிபாலன்
என்னை யிணைய வென்றெண்ணி
யிமையா திழந்தே னிளமையையே
மாலின் மருகோனே குறவள்ளி மணவாளா
வானின் குலமீள மலைசாடு கதிர்வேலாபோர்நடத்த வாயுதங்க டேவையில்லை புன்னகை
சீர்நடத்து கீதைசொன்ன தேவதேவ னாயினும்
தேர்நடத்து பாகனாய்த் திறந்தமேனி புண்களைப்
பார்நடத்த வின்றுமேந்து கேணியாளு பரமனே
மங்கை மார்பகம் வாகு வாய்சுனை வந்த வாதரும் வால்விழி செங்கை சீர்வளை தேடு சிற்றிடை திங்க டேர்முகஞ் செவ்விதழ் தொங்கு தூகுழ றுஞ்ச...