வியாழன், 6 ஆகஸ்ட், 2026

இரைதேடி எண்சீர் மண்டிலம்

 இரைதேடிச் சென்றுவந்தேன் பசியை யாற்ற 

      வெனதுயிரைக் காணவில்லை யென்செய் வேனோ

குரைநீளு கூர்மைமிக்க வெயிற்று நாய்கள் 
    
     குறைவில்லை சுற்றமெங்கும் பதைத்தேன் யானே

யுரைதேடு மூமைபோன்று றைந்து போனே 
    
    னுயிர்மாண்ட வுடலம்போன் றியக்கம் விட்டேன்

கரைதேடு கப்பலென்னைக் காக்குஞ் சோதி 
      
     கடவுளருள் காவாக்கால் வாழேன் காணே

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

நினையொழிந்த எண்சீர் விருத்தம்

 நினையொழிந்த நேரமெலா மிருளாய் நீள 

      நிலைகுலைந்த நெஞ்சமதின் வலியு மோங்கச்

சுனையொழிந்த கயலினம்போல் சோர்வி லாழச் 

     சுயமிழந்து தத்தளிக்குஞ் சோக மூள 

வனையொழிந்த சேயினைப்போற் றிக்கற் றோட 

       வறிவிழந்து சுற்றுநிலை படிமீ தேனோ 

வெனையொழிந்து கரையுநிலை யுன்னி லென்றோ 

       விடையொழிந்த வள்ளியமை சேருங் கோவே 

செவ்வாய், 28 ஜூலை, 2026

மூவாறு கண்களும் இன்னிசை வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

மூவாறு கண்களு முத்தமிழ் மெய்யாக

மூவீ ரிருதோளு முந்து தமிழுயிராய்ச்
சேவன் மயில்வேற் சிவமைந்தன் சேவைதர
மேவுவினை யாகாதோ வீண்

சனி, 25 ஜூலை, 2026

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின்

றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை 

யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத்

தரங்கமாளு நீர்மையை வரம்புரைத்த லாகுமே 

வாடுவார்படி அறு சீர் விருத்தம்(முற்றுமோனை)

வாடு வார்படி வாழ்வெலா 

     மாது மாயமே மாய்ந்திடா 

நேடு நேர்வழி நினைவிலா 

     நீங்க நேயமே நெஞ்சினிற்  

றேடு தீர்வுக டீர்விலை 

     தெள்ளித் தெளியவே திருவரு 

ணாட நல்வழி நல்குவா 

    ஞால நாகணை நாதனே 

வெள்ளி, 24 ஜூலை, 2026

மங்கை எழுசீர் விருத்தம் (சந்தம் முற்றுமோனை)

மங்கை மார்பகம் வாகு வாய்சுனை 

      வந்த வாதரும் வால்விழி 

செங்கை சீர்வளை தேடு சிற்றிடை 

      திங்க டேர்முகஞ் செவ்விதழ் 

தொங்கு தூகுழ றுஞ்சு சோர்வழி 

       தொய்வில் சுந்தரத் தோள்களுந்

தங்கு தாழ்மனஞ் சங்கு சக்கர 

     சார்ங்கன் றாளிணை சாருமே  

வியாழன், 23 ஜூலை, 2026

மன நிறை வனிதையின் அறு சீர் விருத்தம் (முற்றுமோனை)

 மனநிறை வனிதையின் மதுவதோ 

       மதிநிறை மகிழ்தரும் வடிவதோ 

தனநிறை தையலின் றழைவதோ 

      தனிப்பெருஞ் சார்விலி தமிழதோ 

நினைவொழி நெடுநிலை நெகிழ்வதோ 

      நிகரிலி நிலவொளி நீர்மையோ 

வினையொழி வேலவன் மிகையருண் 

      மிகைமொழி விளம்பினும் விந்தையே 

இரைதேடி எண்சீர் மண்டிலம்

  இரைதேடிச் சென்றுவந்தேன் பசியை யாற்ற        வெனதுயிரைக் காணவில்லை யென்செய் வேனோ குரைநீளு கூர்மைமிக்க வெயிற்று நாய்கள்            குறைவில்லை...