சனி, 3 ஜூன், 2023

வைகாசி விசாகம்

 

ஈசனுதற் தேசவிழி வீசுபொறி ஆசுகனும்
காசினியில் மாசறுக்கும் ஆசுநதி வாசஞ்செய                வீசிடவே
 

தேசுடைய பீசமதும் சேயுருவம் ஆறெடுத்துப்
பாசமுள ஆறனையர் அன்பதற்குப் பாத்திரமாய்          வீற்றிருந்த

நேசமுடைப் பாசுபதன் பாகமொரு வாசஞ்செயும்
தேசுமிகு மாசுனையள் ஆறுருவும் ஓருருவாய்                ஆக்கியதால்

மோசஞ்செயும் தானவரின் காலயெலை ஞாலமதில்
தீருமென வானவரும் மானவரும் பூரிப்பில்                      ஆழ்ந்தனரே

9 சீர் ஆசிரிய விருத்தம் 



ஆசுகன்= வாயு தேவன்
மாசறுக்கும் ஆசு நதி = கங்கை
மாசுனை= சரவணப் பொய்கை - பார்வதியின் அம்சம்
மாசுனையள் = பார்வதி
மானவர் = மானிடர்
பீசம் =வித்து 

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...