செவ்வாய், 12 செப்டம்பர், 2023

திருச்சீரலைவாய்

 மாரனை நாடாது வாலிபம் வேறேது 

மாதுளம் காணாது மானுட வாழ்வேது                             அதுபோலே
 

சூரனை போரூடு சூடிய வேலோனை 

தூமலர் தாளோனை தாரணி மார்போனை                  மனதாலே
 

காருமை பாலோனை கார்த்திகை மேலோனை 

காதலில் சேராமல் கானகம் போவேனோ                        ஒருநாளே
பாரலை ஓயாத பாதகம் நேராத 

சீரலை வாயாளும் வானவர் கோமானின்                     மருகோனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...