செவ்வாய், 12 செப்டம்பர், 2023

திருச்சீரலைவாய்

 மாரனை நாடாது வாலிபம் வேறேது 

மாதுளம் காணாது மானுட வாழ்வேது                             அதுபோலே
 

சூரனை போரூடு சூடிய வேலோனை 

தூமலர் தாளோனை தாரணி மார்போனை                  மனதாலே
 

காருமை பாலோனை கார்த்திகை மேலோனை 

காதலில் சேராமல் கானகம் போவேனோ                        ஒருநாளே
பாரலை ஓயாத பாதகம் நேராத 

சீரலை வாயாளும் வானவர் கோமானின்                     மருகோனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...