அருந்துங்கா றீண்ட வகலிகை பெற்றா ளழகுருவ
மருந்துங்கா றீண்ட வரச னடைந்தா னழியாப்புக
ழருந்துங்கா றீண்ட வடங்கா நதியு மகிலம்வர
வருந்துங்கா றீண்ட லடியா ரணிவா ரகத்தழகே
கட்டளைக் கலித்துறை
சீர் பிரித்து
அரும் தும் கால் தீண்ட அகலிகை பெற்றாள் அழகு உருவம்
அரும் தும் கால் தீண்ட அரசன் அடைந்தான் அழியாப் புகழ்
அரும் தும் கால் தீண்ட அடங்கா நதியும் அகிலம் வர
அரும் தும் கால் தீண்டல் அடியார் அணிவார் அகத்து அழகே
அரும் தும் கால் - அரிய காலின் தூசி
முதலடி இராமரையு மிரண்டாமடி வாமனரையும் மூன்றாமடி திருமாலின் பாதத்தின் வந்த கங்கையையும் அப்பேற்பட்ட விஷ்ணு பாத சின்னத்தைத் தன்னகத்தே தாங்கும் அடியார்களையும் நான்காமடி குறிக்கின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக