ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

யாவுமுள்ள ஈசன் கலி விருத்தம்

யாவுமுள்ள ஈசனென்னை வேண்டிநின் றிரந்தனன்
மாவலிக்கு வாய்த்ததென்ன வாமனர்க் களித்திட
பாவபுண்ணி யத்துடைத்த பாசமேவு மென்னையே
நீவொடுக்க வந்தநீர்மை நேரிலாத நீர்மையே

 மாவலியின் கூற்று 

யாவுமுள்ள ஈசன் என்னிடம் வந்து இரந்து நின்றனன் ,

அவனிடம் அளிக்க என்னிடம் (மாவலியிடம்) என்ன உள்ளது?

அதனால் என்னிடம் உள்ள பாவம் புண்ணியம் ஆகிய பாசத்தை 

அவன் மொத்தமாக வாங்கிக் கொள்ள வந்தான் , என்னே அவன் நீர்மை 

என அறிந்து கொண்டேன் !

படம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி