ஞாயிறு, 11 மே, 2025

கருணை ஏகபாதம்

 கருணைக் குருவகங் காமாட்சி கண்களே

 கருணைக் குருவகங் காமாட்சி கண்களே

 கருணைக் குருவகங் காமாட்சி கண்களே

 கருணைக் குருவகங் காமாட்சி கண்களே

 

 

சீர் பிரித்து

 

கருணைக்கு உரு அகம் கா மாட்சி கண்கள் ஏ(ங்)கு

அருணைக்கு உரு அகம் கா மாட்சி கண் கள் ஏகு

அருணைக் குருவ கங்கா மாட்சி கண்கள் ஏ

 கருணைக்கு உருவகம் காமாட்சி கண்களே !


பொருள்

 

கருணைக்கு ஒரு உரு கொடுத்து அதன் அகம்/ மனம் சோலைகளைப் போன்ற பெருமை உடையாதாக இருக்குமானால், அது கண்கள் ஏங்கித் தவிக்கும் அருணைக்கு உரு அகம் காக்கும் மாட்சிகண் (திருவண்ணாமலை என்னும் பதியின் கண் உதித்த) தேன் போன்ற கவிமழை பொழிந்த (எமது) அருணைக் குரு(அருணகிரினாதர்) அவர்தம் கண்கள் எப்போதும் கங்கையின் பெருமையான முருகனிடமே இருந்தாலும், அதற்கும் மூலமாக இருப்பது யாரென்றால் கருணைக்கு உருவகம் ஆன காமாட்சி தேவியின் கண்களேயாம் !

 

Life Story of ArunagirinatharARUNACHALA GRACE: Parrots and Arunachala

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி