விழியா லடைவார் விழையார் விழைவார்
மொழியா லடைவார் மொழியார் மொழிவார்
உழையா தடைவார் முழுதாய்ப் பணிவார்
பழியா லடைவார் படிகாத் தவரே
விழைவிற்கு மிக அழகாக மனங்கவரும் வடிவாய் இருக்கும் அர்ச்சாவதாரித்தில் ஈடுபடுவார் விழியியால் பேறடைவார், திருவாய்மொழியின் அழகில் ஈடுபட்டு அதனை மொழிவார் மொழியால் பேறடைவார்
ஒரு கடினமும் இல்லாது உழையாது பேறை அடைவார் முழுதும் சரணாகதி அடைந்த பிரபன்னர்கள்
பகவானைப் பழித்தும் பேறை அடைவார்காள் வாயில் காப்பார்களான ஜெயனும் விஜயனும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக