அவியு முடலு மழியும் பொருளும் புவியிற் பிணியும் பிணையோ - நவில்வோ முடியும் வரையின் முருகன் பெயரை விடியும் வினைகள் விரைந்து
அவியும் உடலும் அழியும் பொருளும்
புவியில் பிணியும் பிணையோ? நவில்வோம்
முடியும் வரையில் முருகன் பெயரை
விடியும் வினைகள் விரைந்து
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக