அழியும் பொருளு மழியா வறிவுங் கழியும் பொழுதுங் கழியா -விழைவும் புவிமேற் படைத்தான் புகழைப் புகல்வீர் நவமாய் நயந்திர ஞான்று(ம்)
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக