செவ்வாய், 21 அக்டோபர், 2025

சிறப்பென்றும் சிந்து (செவ்வாயிற் செவ்வேள்)

சிறப்பென்றுஞ் சேந்தனைச் சிந்தித்தல் - ஞான்றும்

மறப்பின்றி மாண்பொடு வந்தித்தல் 


உறுப்பொன்றிக் கந்தனைச் சேவித்தல் - மற்ற

உணர்வின்றிப் புந்தியிற் பாவித்தல்


பொறுப்பென்று மூலனைத் த்யானித்தல் - நாகப்

பொருப்பொன்றி நாதனைப் போற்றிடுதல்


இறப்பின்றி வேலனைச் சேர்ந்திடவே - மாயப் 

பிறப்பறுக்கும் பெம்மான்றாள் மறவாதே 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...