செவ்வாய், 21 அக்டோபர், 2025

சிறப்பென்றும் சிந்து (செவ்வாயிற் செவ்வேள்)

சிறப்பென்றுஞ் சேந்தனைச் சிந்தித்தல் - ஞான்றும்

மறப்பின்றி மாண்பொடு வந்தித்தல் 


உறுப்பொன்றிக் கந்தனைச் சேவித்தல் - மற்ற

உணர்வின்றிப் புந்தியிற் பாவித்தல்


பொறுப்பென்று மூலனைத் த்யானித்தல் - நாகப்

பொருப்பொன்றி நாதனைப் போற்றிடுதல்


இறப்பின்றி வேலனைச் சேர்ந்திடவே - மாயப் 

பிறப்பறுக்கும் பெம்மான்றாள் மறவாதே 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...