செவ்வாய், 21 அக்டோபர், 2025

சிறப்பென்றும் சிந்து (செவ்வாயிற் செவ்வேள்)

சிறப்பென்றுஞ் சேந்தனைச் சிந்தித்தல் - ஞான்றும்

மறப்பின்றி மாண்பொடு வந்தித்தல் 


உறுப்பொன்றிக் கந்தனைச் சேவித்தல் - மற்ற

உணர்வின்றிப் புந்தியிற் பாவித்தல்


பொறுப்பென்று மூலனைத் த்யானித்தல் - நாகப்

பொருப்பொன்றி நாதனைப் போற்றிடுதல்


இறப்பின்றி வேலனைச் சேர்ந்திடவே - மாயப் 

பிறப்பறுக்கும் பெம்மான்றாள் மறவாதே 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...