கார்த்திகை மாதீபங் காணத் தரமேசு
மார்த்தி மதமீறா கொங்கு
சீர் பிரித்து -
கார்த்திகை மா தீபம் காணத் தரமே சுமார்த்தி மதம் ஈறு ஆ கொங்கு
கார்த்திகை மாதீபத்தைக் காணத் ஒரு விதமான உயர் தரம் உண்டாகும், அது யாதெனில், சுமார்த்தி (ஸ்மார்த்த - வேத) மதத்தின் ஈறு ஆ (இறுதியான வழி) ஆன அமுது (கொங்கு) .
கார்த்திகை மஹாதீபத்தைத் தரிசிப்பதே வேத மதத்தின் இறுதி இலக்கான வீடு பேற்றை வழங்கக் கூடிய வழியான அமுதத்தைப் போன்றது என்பது கருத்து
இதில் கார்த்திகை- கார்த்திக்கையும், ரமேசு - ரமேஷையும், ஆர்த்தி (சுமார்த்தியின் பகுதியாக) மீறா(சாய் மீரா) கொங்கு (கொங்குவேள்) தத்தமது பெயர்களையும் குறிக்குமாறு இயற்றப் பெற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக