வெள்ளி, 22 செப்டம்பர், 2023

மாலைமாற்று

 

மாவா தாழிகா காழிதா வாமா நீவா தூழிபாம் பாழிதூ வாநீ சாவா தேகவீ வீகதே வாசா மேவா தேதுபோம் போதுதே வாமே - கலிவிருத்தம்
 
மா வாது ( போர்- பாரதம்) அதில் ஆழியை ( சக்கராயுதம்) ஏந்திக் காத்தவனே எமக்கு உறுதி( காழி) தா அழகா ( வாமா) நீவாது ஊழி ( நீங்காது பல ஊழி வரினும்) பாம்புப் படுக்கையில் பாற்கடலில் (ஆழியில்) உள்ளத் தூயப் பாதை நீ ( தூ ஆ நீ )
 
சாவாது ஏக ( உனை ) ஈ ( எமக்கு அருள்க ) வீ கதே வாசா ( விரும்பத்தக்க உயர்ந்த கதியான வைகுண்டம் உறைவோனே) மேவாது ( உன்னுடன் பொருந்தாது) ஏது ( செல்வம் ) போம் ஏனென்றால் நீ போது தே ( பூ போன்ற இலக்குமியின் தேவன் ) வாமே ( அல்லவோ)
 
படம்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...