திங்கள், 29 ஜனவரி, 2024

இராம விருத்தம்

 உருவிலங்கைத் தேடி யொருதலைவ னோட
வருவிலங்கைத் தேவன் மைதிலியை மாயத்
துறவியைப் போலத் துகிலுடுத்தி நாடிக்                   களவாட

ஒருவிலங்கை வீழ  ஒருவிலங்கை வாழ
ஒருகணையை யாள ஒளிந்தொளிரு நீயும்   
உறுவிலங்கைத்  தீய ஒருவிலங்கை யேவி              மகிழ்வோனே   

செருவிலங்கைச் சேர வருவிலங்கைக்  கூட
பெருவிளங்கும்  பால மொருமனதா யாக
வொருவிலங்கைக் கோனை யுருகுலைத்தி ராம     மகராசா

கருவிலங்கை நாமு மொருவிலங்கைப் போல
உருவிலங்க நாளு மருமலர்க டூவி
செருவொழிந்து வீழ வரமகிழ்ந் தீவாய்                     பெருமாளே     

13 சீர் #விருத்தம்     

 

படம்     

உரு விலங்கு - மாரீசன்
ஒரு விலங்கு ஐ - வாலி
ஒரு விலங்கு ஐ - சுக்ரீவன்
ஒரு விலங்கு ஐ - ஆஞ்சநேயர்
வருவிலங்கு - பாலம் கட்ட உதவி செய்த விலங்குகள்
ஒரு விலங்கு ஐ - கஜேந்திரன்

மாரீசனைத் தேடி ஒப்பற்ற தலைவனான இராமன் ஓடும்பொழுது
இராவணன் துறவி வேடமிட்டு மைதிலியை களவாடிச் சென்றான்

ஒளிரும் இராமர்  வாலி வீழ சுக்ரீவன் வாழ ஒளிந்து  கணையெய்தினார்
பின்னர் ஆஞ்சநேயரை வலிமையான இலங்கைக்குத் தூதனாக அனுப்பி தீயிட்டார்

போர் செய்ய இலங்கையை அடைய பிற விலங்குகளின்  உதவியால் பெருமையாக விளங்கும்   சேது பாலம்  ஒருமனதாக அமைத்தார் , அதன் பின்னர் போரில் இலங்கைக் கோனான இராவணனை வென்றார் இராமர் என்னும் மக்களின் அரசன்

எண்ணிலாக் கருவில் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் விலங்கை நாம் செருக்கொழிந்து  விட்டொழிய , எங்கள் உருவம் ஒளிர , கஜேந்திரனைப் போல  உம்மை வாசமிக்க மலர்கள் தூவி  நாளும் தொழும் வரம் அளிப்பாய் பெருமாளே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வள்ளியம்மை கலி விருத்தம்

வள்ளியம்மை நாதர்தந்த வடிவுயர்ந்த மொழியுனைப் பள்ளிசென்று பயிலவில்லை யென்றிருந்தும் பாவியேற் கள்ளியள்ளி யுன்னையீந்த வளவிலாத வமுதமா யுள்ளமொன்ற...