கண்ணிருண்டு போனபோதும் கொண்டபத்தி மாறிடா தண்ணிளியை மாற்றவர்க்குந் தங்குதடை யின்றியே விண்ணுமண்ணு மென்றுமேத்த வள்ளலென்ன தந்தனை மண்ணுலகிற் கூரமாள வந்துதித்த நாதனே
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக