வெள்ளி, 19 ஜூலை, 2024

அறிதுயிலரியா வஞ்சித்துறை

அறிதுயிலரியா விரிசடையிறையா
குறமகளிறையா குழலழகுமையா
வறுவழியுனதா வருவுருவகையா
சிறைபிணிவிடியா பிறைமதியழகா   

சீர் பிரித்து

அறி துயில் அரியா விரி சடை இறையா
குறமகள் இறையா குழல் அழகு உமையா
அறு வழி உனது ஆ அரு உரு வகையா
சிறை பிணி விடி ஆ பிறை மதி அழகா  

பொருள் 

அறி  துயில் கொள்ளும் அரி விரி சடை உடைய அரன்
குறமகள் கேள்வன் முருகன் குழல் அழகு பொருந்திய உமை
அனைவரும் நீ தானோ என்ற கேள்வியாகவும் அல்லது அதுவே
பதிலாகவும் கொள்ளலலாம் , அறு சமயம் உனது வழியோ?
அரு உரு நிலையும் நீ அன்றோ , அது எவ்வாறாயினும் , பிணியில்
சிறைப்பட்டுத் தவிக்கும் உயிர்களை , விடிவிப்பாயாக பிறை மதி அழகா/ இறைவா !

See related image detail. Shriman Narayan Narayan Hari Bol - YouTubeImage result for சிவன் குடும்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...