வியாழன், 18 ஜூலை, 2024

ஒருவரை சிலையா

ஒருவரை சிலையா வுருவரு நிலையா
புரமெரி நகையா புனலணி சிகையா
சிரமுறை பணியா சிதமுறை பணியா
குருவரு குமரா குணமளி பரமா  



ஒரு வரை -  தனிப்பெரும் மேரு மலை
சிலையா - அதை வில்லாகக் கொண்டவனே
உரு அரு நிலையா - அரு உரு / உருவரு என்ற நிலைகளில் விளங்குபவனே
புரமெரி நாகையா - நகைத்தே திரிபுரங்களை எரித்தவனே
புனலணி சிகையா =கங்கையைச் சிகையில் அணிபவனே
சிரமுறை பணியா - சிரத்தில் பாம்பைத் தாங்கியவனே
சிதம் உறை பணி ஆ - உன்னைப் பணியும் உயிர்களுக்கு என்றும் சித்தத்தில் உறைந்து உணர்வூட்டுபவனே
குருவரு குமரா - தனக்குத் தானே குருவாக முருகனாக வந்தவனே / குருவாக வரும் என்றும் இளமை மாறாதவனே - தட்சிணா மூர்த்தி
எமக்கு குணமளி ( நன்னெறி பின்பற்றும் படி வரமளி ) பரமனே 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி