ஆடிப் பூரத் தவதரித்து
வாயர் பாடித் தனைநினைத்துக்
கூடத் தேவைப் பரிதவித்துக்
கோலக் கோவைத் தமிழளித்து
நாடிப் பாவை நெறியறுத்து
நாதர் தாள்சேர் வழிவகுத்து ச்
சூடித் தந்த சுடர்கொடியைப்
பாடப் பார்க்கண் பிறந்துவந்தேமே
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக