வியாழன், 5 செப்டம்பர், 2024

திருக்குலாவும் கலிவிருத்தம்

திருக்குலாவு மாரூர்மே லுருக்கமான செந்தமி
ழிருக்கமைத்த பிள்ளையின் சிறப்புரைத்த செவ்வுரை
கருத்துணர்ந்து கூறினார் கலைச்சிறந்த செல்வனா
ருருக்குவெண்ணெய் கள்வனி னுயர்ந்தநாம மாள்வரே   

 



சீர் பிரித்து

திருக் குலாவும் ஆரூர் மேல் உருக்கமான செந்தமிழ்
இருக்கு அமைத்த பிள்ளையின் சிறப்பு உரைத்த செவ்வுரை
கருத்து உணர்ந்து கூறினார் கலைச் சிறந்த செல்வனார்
உருக்கு வெண்ணெய் கள்வனின் உயர்ந்த நாமம் ஆள்வரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...