வியாழன், 24 அக்டோபர், 2024

ஓர் மலை வெண்பா

ஓர்மலை மத்தாக்கி யொள்ளரவ நாணாக்கி
யார்க்கடலை யன்று கடைந்தகணங் - கூர்மமாய்
நின்றானைக் கூர்ந்திடுவாய் நெஞ்சே யருமாயை
யொன்றானை யோங்குகரஞ் சேர்த்து

 

 

ஓர் மலை மத்து ஆக்கி ஒள் அரவம் நாண் ஆக்கி 

 ஆர்க்  கடலை அன்று கடைந்த கணம் - கூர்மமாய் 

நின்றானைக் கூர்ந்திடுவாய் நெஞ்சே அரு மாயை 

ஒன்றானை   ஓங்கு கரம் சேர்த்து 


ஓர் மலை - மேரு மலை , ஒள் அரவம் - வாசுகி 

மாயை தான் உருவாக்கும் சக்தி என்பதால் அதில் திருமால் ஒன்ற மாட்டான் 

அன்று பாற் கடலைக் கடைந்த போது ஆமையாய்த் தாங்கிய அரு மாயையில் ஒன்றாத  திருமாலைக் கூர்ந்து நெஞ்சில் நிறுத்திக் கையைச் சேர்த்து உயர்த்தி வணங்கிடுவாய்  

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...