திருஞான சம்பந்தரின் இம்மாலைமாற்றுப் பாடலிற்குச் சாக்த பரமாக ஒரு பொருள் காணலாம்
யாகா - யாக வடிவானவளே
யாழீ - சரசுவதி காயா - உரு எடுப்பவளே ,
கா தா யார் ஆ - அக்களை காப்பதும் அழிப்பதும் யார் என்று முடிவெடுப்பவளே,
ராதா - ராதையாக வருபவளே ,
யாயாய் - எமது தாயாக ,
ஆ யா -உயிர்களின் தளையை (விடுவிக்கும்)
தாரா - தாரா எனும் தேவியே,
ராயா தா - பெரும் அரசர் தேவர் இவர்களும் சக்தி தருபவளே ,
காயா - காயாம்பூ நிறத்தவளே ,
காழ் ஈயா கா யா -குற்றம் சேராதவாறு உயிர்களைக் காப்பாயாக
காழிப் பிள்ளையாரின் பாடலை சாக்த பரமாக சிந்தித்த போது! இது குருமார்களின் கருத்தல்ல எளியேனின் சொந்த கருத்து , குறிப்பாக தமிழ் மொழியின் ஆழத்தைக் காட்டுவதாக எடுத்துக் கொள்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக