ஞானசத்தி வேண்டுவோர் ஞானசத்தி தரனையும்
கார்யசித்தி வேண்டுவோர் கந்தசாமி வடிவையும்
வினைகளோட விரும்புவோர் சுப்ரமண்ய உருவையும்
கடினமோட விரும்புவோர் கஜமமர்ந்த நாதரும்
சௌக்கியங்கள் வேண்டுவோர் கார்த்திகேய கோலமும்
மாயைவீய விரும்புவோர் தாரகாரி கோலமும்
மணமுடிக்க நாடுவோர் வள்ளிநாதன் கோலமும்
மகிழ்விருக்க வேண்டுவோர் மயிலமர்ந்த கோலமும்
பகைதகர்க்க வேண்டுவோர் சேனானி கோலமும்
பழுதறுக்க அங்கமேவு பாலசாமி கோலமும்
மங்கலங்கள் வேண்டுவோர் தேவசேனை பதியையும்
சரவணத்தி லுத்பவிக்குஞ் சத்திமைந்தன் தன்னையும்
ஆணவத்தை வற்றசெய் குமாரசாமி திருவையும்
ஆளநிற்குந் துன்பநீங்க க்ரரௌஞ்ச பேதனரையும்
பாடுபட்டுக் கலைவளர்க்கப் பிரம்மசாத்தன் திருவையும்
பார்வதியை வணங்கநின்ற பலனனைத்து நாம்பெற
ஷண்முகத் திறைவிமைந்தன் பார்வைபற்றி நாளுமே
ஒண்முகத்து முருகனுக்கு உடல்கலந்த ஆவியை
வன்மநீக்கி பூசைசெய்ய யாவுகிட்ட லாகுமே
பன்முகத்து வாழ்வுவாழ பாதைவேறு முள்ளதோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக