அன்புடைத்த தாயவள்
அன்புடைத்த தூயவள்
ஆசைசேயின் றாயவள்
இன்பமீன்ற நேயவள்
ஈகையென்ற சொல்லிவள்
உம்பர்போற்று மூத்தவள்
ஊழகற்றுங் காற்றிவள்
என்பணிந்த கோலவள்
ஏழ்பிறப்புங் காப்பவள்
ஐந்தெழுத்து மானவள்
ஐங்கரற்குத் தாயவள்
ஒன்பதின்கண் வாழ்பவர்
ஓகபாதை சேர்ப்பவள்
ஔவையேத்து நாதருக்
கௌடதத்தை யீந்தவள்
புவனமேழும் ஆள்பவள் புவியமர்த்தி வைத்தனள்
சிவமுணர்ந்த சித்தரை நவமையாக வைப்பவள்
அவமகற்றி வாழ்விலே யமுதமாக்கு மூலவள்
உவமையற்ற அன்னையை உள்வதன்றி வேலையே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக