மலைமகள் பார்வதி கலைமகள் வாணியொ
டலைமகள் லக்ஷ்மியு மேவுடனாய்
அலைகடன் மாதவ னனமமர் நான்முகன்
பிறையணி நாதனுங் கூடியுனை
நிலைகெட தானவர் நிலையுற வானவர்
மயிலமர் வேலெறி சண்முகனே
மலைதனில் வீற்றிருங் குறமகள் கோவுனை
மனமுகந் தேத்துவர் வாழியவே
சீர் பிரித்து
மலை மகள் பார்வதி கலை மகள் வாணி யொடு அலைமகள் லக்ஷ்மியுமே உடனாய்
அலை கடல் மாதவன் அ(ன்)னம் அமர் நான்முகன் பிறை அணி நாதனும் கூடி உனை
நிலை கெட தானவர் நிலை உற வானவர் மயில் அமர் வேல் எறி சண்முகனே
மலை தனில் வீற்று இரும் குற மகள் கோ உனை மனம் உகந்து ஏத்துவர் வாழியவே!
அயிகிரி நந்தினி என்னும் மஹிஷாசுர மர்தினி தோத்திரத்தின் சந்தத்தை ஒற்றி அமைந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக