செவ்வாய், 4 மார்ச், 2025

ஆழியான் பாலது விருத்தம்

 

ஆழியான் பாலது அன்புளங் கொண்டதால் மாயமா யாகினாயோ 
ஆணிவே ரானநீ ஆலிலை பாலகன் ஆணையால் தூங்கினாயோ
 
ஊழிசேர் ஊழினை உற்றவன் என்பதால் உன்னளி மூடினாயோ 
ஓகமோ யாகமோ ஒன்றுமே அறிகிலேன் என்பதால் வாடினாயோ
 
பாழிலே வாழ்வெலாம் பண்டுநாள் விற்றதால் பாவிமேல் கோவந்தானோ 
பங்கயப் பாவையைப் பாடியே என்குறை இன்றுநான் தீர்க்கலாமோ
 
ஆழிசூழ் பூவிலே ஆவுறுந் துன்பினை யன்னையே பொறுக்கலாமோ 
ஆறுமா றாகநீ அன்புளங் கொண்டுவா நேரிலா ஸ்ரீதேவியே
 
 
 
May be an image of 1 person, temple and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலாத ஒரு எழு சீர் மண்டிலம்

முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ   படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...