வியாழன், 20 மார்ச், 2025

தாயுள்ளம் விருத்தம்

 தாயுள்ளம் பெருங்கருணை தேடிவரந் தந்திடுவான்
    றாகமென வொருபோதும் போகவிடான் கண்டாயோ
சேயுள்ள மரும்பெருமை நாடிந்து மகிழ்விப்பான்
     றீந்தமிழை யினிப்பெனவே தித்திக்க நமக்களிப்பான்
காயுள்ளங் கொடும்பகைவர் கணப்பொழுதில் வென்றிடுவான்
     கருணைமிகுங் கடலிவனால் கொல்லாம லாட்கொள்வா
னீயுள்ள மளவில்லை யீன்றவளை யொத்தவனா
      மிவன்சாயன் மொத்தமுமுன் பிரதிபிம்ப முமையம்மே 



தாய் உள்ளம் பெரும் கருணை தேடி வரம் தந்திடுவான் 

தாகம் என ஒரு போதும் போக விடான் கண்டாயோ

சேய் உள்ளம் அரும் பெருமை நாடி வந்து மகிழ்விப்பான்

தீந்தமிழை இனிப்பெனவே தித்திக்க நமக்கு அளிப்பான்

காய் உள்ளம் கொடும் பகைவர் கணப் பொழுதில் வென்றிடுவான்

கருணை மிகும் கடல் இவனால் கொல்லாமல் ஆட்கொள்வான்

ஈ உள்ளம் அளவு இல்லை ஈன்றவளை ஒத்தவனாம் 

இவன் சாயல் மொத்தமும் உன் பிரதிபிம்பம் உமை அம்மே

 

படம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி