வியாழன், 6 மார்ச், 2025

சீறுமாறு கலி விருத்தம்

 சீறுமாறு சடையணிந்த சந்த்ரசேக ரங்கமே
வாறுகூறு தாண்டிவந்து மாலைசூடு மங்கையா
யேறுமாறி யோகிகட்குங் கூறொணாத கூறெனக்
காறுமாறு நீயிருக்க வார்ப்பரிப்ப தில்லையே



சீறும் ஆறு சடை அணிந்த சந்திரசேகர் அங்கம் மேவு
ஆறு கூறு தாண்டி வந்து மாலை சூடு மங்கையாய்
ஏறும் ஆறு யோகிகட்கும் கூறு ஒண்ணாத கூறு எனக்கு
ஆறும் ஆறு நீ இருக்க ஆர்ப்பரிப்பது இல்லையே

 

கங்கையைச் சடையிலணிந்த சிவபெருமானின் பாதியாயிருப்பவளே, நீ ஆறு ஆதாரங்களைத் தாண்டி வந்து உன் மணாளனை மணக்கிறாய், இக்குண்டலினி சத்தியின் சூட்சுமம் யோகிகட்குக் கூட தெரியாது ஒன்று அப்பேற்பட்ட நீ எனக்கு ஆறுதல் தரக்கூடிய வழியாய் இருக்கையில் நான் ஏன் ஆர்ப்பரிக்க வேண்டும்? 

 

Kamalambika devi | 🙏🙏🙏 | ○ Kamalambika is the presiding Goddess in the  temple of Thiruvarur of Thanjavur district. Muthuswami Deekshithar has  written many of his Krithis appealing to this Goddess. I

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி