வெள்ளி, 16 மே, 2025

தந்தை சௌபாயீ

தந்தை சொல்லே கதியென் றிருந்தா
னங்கை சொல்லைத் தீவிற் பணிந்தா
னெந்தச் சொல்லைக் கையெடுப் பானோ
வந்தச் சொல்லே மெய்யெனுந் தேனோ

 

 சீர் பிரித்து

தந்தை சொல்லே கதி என்று இருந்தான்

நங்கை சொல்லைத் தீவில் பணிந்தான் 

எந்தச் சொல்லை கை எடுப்பானோ

அந்தச் சொல்லே மெய் என்னும் தேனோ 

 

பொருள்

 

தந்தை சொல்லே கதி என்று இருந்தா இராம பிரான்றன் 

நங்கை யான சீதா பிராட்டி சொல்லைத் தீவிற் சென்று பணிந்தவனான ஆஞ்சநேயன்

எந்தச் சொல்லைக் கையாண்டாலும் அவன் நவ வியாகரண பண்டிதன் என்பதால் 

அச்சொல்லே உண்மையின் வடிவமாகவும் தேனைப் போன்று இனிமையாகவும் இருக்கும் என்பதாம் 

 இப்பாடல் சௌபாயீ என்னும் ஹிந்தி யாப்பில் அமைந்தது (ஹனுமான் சாலிசா போன்று)Lord Hanuman with Lord Ram Goddess Sita Religious Waterproof ...

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...