வேண்டுதல் வேண்டேன் விழைவரிய வேண்டாமை வேண்டேன்
றோண்டுதல் வேண்டேன் றுயரகல மீண்டெழல் வேண்டேன்
றூண்டுதல் வேண்டேன் சுருதிதம தாளுமை வேண்டேன்
றாண்டுதல் வேண்டேன் றனிமுருக னாமமென் மாண்பே
சீர் பிரித்து:-
வேண்டுதல் வேண்டேன் விழைவு அரிய வேண்டாமை வேண்டேன்
தோண்டுதல் வேண்டேன் துயர் அகல மீண்டு எழல் வேண்டேன்
தூண்டுதல் வேண்டேன் சுருதி தமது ஆளுமை வேண்டேன்
தாண்டுதல் வேண்டேன் தனி முருகன் நாமம் என் மாண்பே
பொருள்:-
வேண்டுதலும் விழைவதற்கரிய வேண்டாமையும் ஆராய்தலும் (தோண்டுதலும்) துயரினின்று அகன்று மீண்டு எழுதலும்,சுருதிகளின் ஆளுமையும், அதற்குத் தூண்டுதலாக இருப்பனவையும் வேண்டேன், ஒப்பற்ற முருகன்றன் நாமமே எனது மாண்பு என்பதனால் அதை நான் என்றும் கடக்க வேண்டேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக