சிவனாரின் உடுக்கையிற் பிறந்தாய்ச்
செழிப்பாக ஆல்போல வளர்ந்தாய்த்
தவமாளும் திருநாட்டில் மலர்ந்தாய்த்
தமிழ்ச்சங்க அவைதனிலே குளிர்ந்தாய்
உவமிக்கப் பொருளில்லாத் திகழ்ந்தாய்
உயர்கந்தன் அருளாலே பொலிந்தாய்
நவமென்றும் நலியாது நகைத்தாய்
நகையாக காப்பியங்கள் புனைந்தே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக