மண்ணீந்தாய் நின்கோவில் செய்ய
மதியீந்தாய் நின்னாம முள்ள
மலரீந்தாய் நின்பூசை செய்யக்
கண்ணீந்தாய் நின்னுருவைக் கொள்ளக்
கனியீந்தாய் நின்னன்பா யுண்ணக்
கதியீந்தாய் நின்னன்பர்க் கெல்லாந்
தண்ணீந்தாய் நின்னருளா யாடத்
தகைவீந்தாய்த் தனித்தமிழிற் பாடத்
தடையீந்தாய் நின்சரணை நாட
விண்ணீந்தாய்த் தேவர்க்கு வேலா
விதியீந்தாய் நின்புகழைப் பாட
விழைவேனோ நீயிருக்க வேறே
சீர்பிரித்து:-
மண் ஈந்தாய் நின் கோவில் செய்ய
மதி ஈந்தாய் நின் நாமம் உள்ள
மலர் ஈந்தாய் நின் பூசை செய்ய
கண் ஈந்தாய் நின் உருவைக் கொள்ள
கனி ஈந்தாய் நின் அன்பாய் உண்ண
கதி ஈந்தாய் நின்அன்பர்க்கு எல்லாம்
தண் ஈந்தாய் நின் அருளாய் ஆட
தகைவு ஈந்தாய் தனித்தமிழில் பாட
தடை ஈந்தாய் நின் சரணை நாட
விண் ஈந்தாய் தேவர்க்கு வேலா!
விதி ஈந்தாய் நின் புகழைப் பாட
விழைவேனோ நீ இருக்க வேறே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக