பெண்பார்க்கப் போனாலும் பீடு தமிழ்ப்புலவர்
கண்பார்க்குங் காட்சி கவிவடிவே - வெண்பாவா
விற்புருவம் வஞ்சியா வேல்விழிகள் செவ்விதழோ
கற்பனைக் கெட்டாக் கலி
பெண் பார்க்கப் போனாலும் பீடு தமிழ்ப் புலவர்
கண் பார்க்கும் காட்சி கவி வடிவே - வெண்பாவா
வில் புருவம் வஞ்சியா வேல் விழிகள் செவ் இதழோ
கற்பனைக்கு எட்டாக் கலி
ஒரு பெருமைக்குரிய தமிழ்ப்புலவர் பெண்பார்க்கச் செல்கிறார், அவருக்கு யாவுமே கவிவடிவாகவே தெரிகின்றது, அப்பெண்ணின் வில்லைப் போன்ற புருவத்தைப் பார்த்து இது வெண்பாவோ என்றும் , வேல் போன்ற விழிகள் வஞ்சிப்பாவோ என்றும் செவ்விதழ்கள் கற்பனைக்கும் எட்டாத கலிப்பாவோ என்றும் வியக்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக