புதன், 27 ஆகஸ்ட், 2025

களிமண்ணைக் கலிப்பா

களிமண்ணைக் கையுருட்டிக் கணபதியி னுருவமைத் தெளியவகை யினிப்பாக்கி யெலியேறு மிறைக்களித் தளிமண்ணை யென்றேத்த வுடனருளுங் கரிமுகனைத் தெளிமனமே நாடியவன் றிருவடியிற் றிளைமனனே

 

 

களி மண்ணைக் கை உருட்டிக் கணபதியின் உரு அமைத்து எளிய வகை இனிப்பு ஆக்கி எலி ஏறும் இறைக்கு அளித்து அளி மண்ணை! என்று ஏத்த உடன் அருளும் கரி முகனைத் தெளி மனமே நாடி அவன் திருவடியில் திளை மனனே

 

பொருள்-

களி மண்ணைக் கையால் உருட்டிக் கணபதியின் உரு அமைத்து எளிய வகை இனிப்புகள் சமைத்து மூஷிகம் ஏறும் இறைவனான வினாயகருக்கு அளித்து எனக்கு மண் (இடம், வீடு) அளிப்பாய் என்று ஏத்த உடனடியாக அருளும் கரி முகனை, இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்காமல் தெளிவான மனத்தையே நாடி அவன் திருவடியில் திளைப்பாய் நெஞ்சே!

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...