பிழைபொறுப்பாய்ப் பிள்ளையுன புகழ்பாடத் தாமதித்தேன் மழைமுகிலாய் வரமருளும் மதகளிறே மதியளிப்பாய் விழைபொழியுஞ் சித்தமெல்லாம் விரைமலரா லுனைப்பணியத் தழைதமிழாற் றளராது தனியானைப் போற்றிடவே
பிழை பொறுப்பாய்ப் பிள்ளை உன புகழ் பாடத் தாமதித்தேன் மழை முகிலாய் வரம் அருளும் மத களிறே மதி அருள்வாய் விழை பொழியும் சித்தம் எல்லாம் விரை மலரால் உனைப் பணியத் தழை தமிழால் தளராது தனி ஆனைப் போற்றிடவே!
உனது புகழைத் தாமதமாக பாடிய என்னை பொறுத்தருள்வாய், மழை முகில் போன்ற கருணை கொண்டு உடனே வரம் அருளும் மத யானையே, எனக்கு மதி அருள்வாய், மொத்த ஆசையும் சிந்தையும் உன்னையே நறு மலர்களால் தூவிப் பணியவும் தழைக்கும் தமிழால் தளராது துதி செய்யவும் தனி ஆனையான உன்னையே போற்றும்படி அமைய!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக