திங்கள், 15 செப்டம்பர், 2025

மெய் வாய் மூக்கு கண் காது குறள்

மெய்வாய் நிதமூக்கு கீதைகண் சேர்க்காது
பொய்வாய் புலனைந் தவி

 

 

 

மெய் வாய் நி(த்)தம் ஊக்கு கீதை கண் சேர்க்காது
பொய் வாய் புலன் ஐந்து அவி

உண்மையின் வழி நம்மை எப்போதும் நடத்தி ஊக்குவிக்கும் பகவத் கீதையின் கண் சேர விடாதபடி நம்மைத் திசைமாற்றும், பொய்யின் கண் சார்புடைய ஐந்து புலன்களையும் அவிப்போமாக !

மெய்,வாய், மூக்கு, கண், காது என்னும் சொற்களை புலன்களைக் குறிக்காது பயின்ற குறள் வெண்பா

 

May be an image of 1 person, temple and text 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...