சனி, 25 அக்டோபர், 2025

வார்த்தையில்லை விருத்தம்

வார்த்தையில்லை பொருளுமில்லை வாஞ்சையில்லை கவியினில்

நேர்த்தியில்லை நளினமில்லை யாப்பறிந்த பயனுமென்

சீர்த்தியில்லை த்ருப்தியில்லை வாசகர்க்குச் சற்றுமே

கார்த்திகேய முத்தமிழ் கடையனுக்கு மருள்வையே 




சொல்லில் அதன் பொருளில் தேர்ச்சியோ அழகோ இல்லை கவிகளில், அதில் நேர்த்தியில்லை நளினமுமில்லை பின்னர் யாப்பு மட்டும் அறிந்த பயன் யாது? சீர்த்தி இல்லை வாசகர்க்கு அதை படித்து நிறைவும் இல்லை சிறிதளவும், கார்த்திகேய! முத்தமிழ் கடவுளே இக்கடையனுக்கும் தமிழ் அருளை வழங்க மாட்டாயோ?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...