சனி, 25 அக்டோபர், 2025

குறிஞ்சி வாழும் ஆண்டவர் விருத்தம்

 குறிஞ்சிவாழு மாண்டவர்கண் கொஞ்சிபேச வாசையா

செறிந்தஞான மாழ்தவங்க டுறந்தவாழ்க்கை தூநெறி
மறந்திராத மாட்சிபண்ணி சைத்தபாட்டு வேண்டிலை
அறிந்தயாவு மகற்றிவைத்து மன்பையென்றுந் தருகவே


குறிஞ்சி வாழும் ஆண்டவர்கண் கொஞ்சி பேச ஆசையா ?
செறிந்த ஞானம் ஆழ் தவங்கள் துறந்த வாழ்க்கை தூ நெறி
மறந்து இராத மாட்சி பண் இசைத்த பாட்டு வேண்டி(ல்)லை
அறிந்த யாவும் அகற்றி வைத்து உம் அன்பை என்றும் தருகவே !

குறிஞ்சியாண்டவரிடம் கொஞ்சிப் பேச நாம் ஆசைப் படுவோமே ஆயின் , நமக்குச் செறிந்த ஞானமோ ஆழ் தவங்களோ துறவோ தூய நெறி மறவாத மாட்சியோ பண் இசைத்த பாடலோ வேண்டியதில்லை , நாம் அறிந்த யாவற்றையும் அகற்றி நமது அன்பை மட்டும் என்றும் அவனுக்கு அளித்தலே போதுமானது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி