சனி, 25 அக்டோபர், 2025

குறிஞ்சி வாழும் ஆண்டவர் விருத்தம்

 குறிஞ்சிவாழு மாண்டவர்கண் கொஞ்சிபேச வாசையா

செறிந்தஞான மாழ்தவங்க டுறந்தவாழ்க்கை தூநெறி
மறந்திராத மாட்சிபண்ணி சைத்தபாட்டு வேண்டிலை
அறிந்தயாவு மகற்றிவைத்து மன்பையென்றுந் தருகவே


குறிஞ்சி வாழும் ஆண்டவர்கண் கொஞ்சி பேச ஆசையா ?
செறிந்த ஞானம் ஆழ் தவங்கள் துறந்த வாழ்க்கை தூ நெறி
மறந்து இராத மாட்சி பண் இசைத்த பாட்டு வேண்டி(ல்)லை
அறிந்த யாவும் அகற்றி வைத்து உம் அன்பை என்றும் தருகவே !

குறிஞ்சியாண்டவரிடம் கொஞ்சிப் பேச நாம் ஆசைப் படுவோமே ஆயின் , நமக்குச் செறிந்த ஞானமோ ஆழ் தவங்களோ துறவோ தூய நெறி மறவாத மாட்சியோ பண் இசைத்த பாடலோ வேண்டியதில்லை , நாம் அறிந்த யாவற்றையும் அகற்றி நமது அன்பை மட்டும் என்றும் அவனுக்கு அளித்தலே போதுமானது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...