என்னு ளுறைவானை யெங்கெங்குத் தேடியு
மன்னு மகத்துவனைக் கண்டிலனே - கன்னலே
செந்தமி ழண்ணலே செவ்வேட் பரம்பொருளே
வந்தணைத்துக் காட்டு வழி
மன்னும் மகத்துவனைக் கண்டு இலேன் - கன்னலே !
செந்தமிழ் அண்ணலே செவ்வேள் பரம் பொருளே
வந்து அணைத்துக் காட்டு வழி !
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக