திருபடர்ந்த வாழ்வுந் திகைக்கவைக்கும் பாங்காய்
இருமடங்கு கிட்ட இனம்வளர்ந் தோங்கத்
தருகடந்த வள்ளல் தரவெமக்குப் பாங்காய்
உருவெடுத்து வந்தான் உலகளந்த நாதன்
இருளகற்ற வாழ்வில் இசைவடித்த பாவை
அருணமக்கு வாய்த்த அருமையான மாதம்
குருவுணர்த்தப் பெற்றார் கொடையேலோ ரெம்பாவாய்
தரு - கற்பக விருட்சம்
அருணமக்கு = அருள் நமக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக