வியாழன், 18 டிசம்பர், 2025

மார்கழி-3

 திருபடர்ந்த வாழ்வுந் திகைக்கவைக்கும் பாங்காய்

இருமடங்கு கிட்ட இனம்வளர்ந் தோங்கத்

தருகடந்த வள்ளல் தரவெமக்குப் பாங்காய்

உருவெடுத்து வந்தான் உலகளந்த நாதன்

இருளகற்ற வாழ்வில் இசைவடித்த பாவை

தெருளகத்துக் கொள்ளத் தினமருந்தி யுள்ள

அருணமக்கு வாய்த்த அருமையான மாதம்

குருவுணர்த்தப் பெற்றார் கொடையேலோ ரெம்பாவாய்


தரு - கற்பக விருட்சம்
அருணமக்கு = அருள் நமக்கு




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...