குன்றக் குடியுறைக் கோமானைக்
குன்றங் குடியமர் தூமானை
பன்றிப் புகழுரு பார்வேந்தற்
கென்றும் மகிழ்தரு மிளையானை
ஒன்றிக் கரமுய ருளமேத்தல்
ஒன்றே வரமென உணர்வோமே
குன்றக் குடி என்னும் திருத்தலத்தில் உறையும் கோமானைக் குன்றுகள் தோறும் குடியமர்ந்த தூய மஹானை, வெற்றியின் குறியீடாக திகழும் வேலாயுதம் உடையோனை, வஞ்சிக் கொடியான வள்ளியம்மை அணைக்கும் மயில் வாகனனைப், பன்றியாக புகழ்பெரும் அவதாரம் கொண்ட திருமால் என்றும் மகிந்திருக்கும் இளம் பிள்ளையை, கரமுயர அவகைளைச் சேர்த்து உள்ளத்தால் ஏத்துவது ஒன்றே நமக்கான வரமென உணர்வோம் நாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக