மருதுதைத்து மாமகிழ்த்தி வாகைசூடு மரசனே
கருதலார்க்கு வேங்கையா கனிந்தவர்க்குக் கற்பமா
விரதமுற்று வேண்டிநிற்க வீடுகிட்டு நாளிலே
ஒருதவத்து மொட்டிலேனெ னாலகற்று மாயனே
மருது உதைத்து மா மகிழ்த்தி வாகை சூடும் அரசனே
கருதலார்க்கு வேங்கையா கனிந்தவர்க்குக் கற்பமா
விரதம் உற்று வேண்டி நிற்க வீடு கிட்டும் நாளிலே
ஒரு தவத்தும் ஒட்டிலேன் என் ஆல் அகற்று மாயனே
மருத மரமாக நின்றவர்களை உதைத்துத், திருமகள் என்றும் மகிழும் படியாக வெற்றி வாகை சூடும் அரசனே, எதிரிகட்கு வேங்கையைப் போன்றும் கனிந்த அடியார்கட்குக் கல்ப தரு போன்றும் விளங்குபவனே, மாயனே, விரதமுற்று உன்னை வேண்டி நின்றால் வீடு கிட்டும் என்ற உயர்ந்த வைகுந்த ஏகாதசி நாளாக இது இருந்தும் ஒரு தவமும் ஒட்டாது வீணே திரிகின்ற எனது விடத்தை அகற்றுவாயாக
மருதம், மா, மகிழம், வாகை,அரசு, வேங்கை, கல்பம், ஆல் என்னும் எண்மரங்கள் பாட்டில் பயிலப் பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக