செவ்வாய், 16 டிசம்பர், 2025

மார்கழிப் பாவை

 மார்கழி மாத மழையொ டலர்ந்தது 

கார்முகில் வண்ணன் கருணை பொழிந்தது 

நேர்நிக ரில்லா நிமலன் பெயர்சொல்லித்

தேர்கரங் கொண்டரு டேவ னினைவுள்ளி 

வார்புன லாடி வடிவார் மகண்மார்பன் 

சார்வடி யாரொடு சேர்ந்து தொழுதெழச் 

சீர்கழன் மாதவன் சித்தந் தெளிவிப்பான் 

ஏர்கதிர் வந்தா னெழும்பேலோ ரெம்பாவாய்



மார்கழி மாதம் மழையொடு அலர்ந்தது 

நேர் நிகர் இல்லா நிமலன் பெயர் சொல்லி

தேர் கரம் கொண்டு அருள் தேவன் நினைவு உள்ளி 

வார் புனல் ஆடி வடிவார் மகள் மார்பன் 

சார்வு அடியாரொடு சேர்ந்து தொழுது எழ

சீர் கழல் மாதவன் சித்தம் தெளிவிப்பான் 

ஏர் கதிர் வந்தான் எழும்பு ஏலோர் எம்பாவாய் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...