செவ்வாய், 13 ஜனவரி, 2026

மாவாய் ஆசிரியப்பா

மாவாய் பிளந்த மூவா முகுந்தனை 

யேவா நகைத்து முப்புர மெரித்தா 

னஞ்சடர் மிடற்றமு தாக்கு நங்கை

பஞ்சுக் கரமணை பாங்குசெய் வேலன் 

களவிற் குறத்தி கைத்தலம் பற்றக் 

களிற்றுரு வெடுத்த வெள்ளெயிற் றொருவ

னளவற்ற வாற்றலைச் செப்ப 

வான்றோர் மொழியி னகலமுந் துகளே 


மா வாய் பிளந்த மூவா முகுந்தனை 

ஏவா நகைத்து முப்புரம் எரித்தான் 

நஞ்சு அடர் மிடற்று அமுது ஆக்கு நங்கை 

பஞ்சுக் கரம் அணை பாங்கு செய் வேலன் 

களவில் குறத்தி கைத்தலம் பற்ற

களிற்று உரு எடுத்த வெள் எயிற்று ஒருவன் 

அளவ அற்ற ஆற்றலைச் செப்ப 

ஆன்றோர் மொழியின் அகலமும் துகளே 


குதிரையாய் வந்த கேசி என்னும் அரக்கனின் வாயைப் பிளந்தவனான கண்ணனை அஸ்திரமாகக் கொண்டும் ஏவாமலே முப்புரம் எரிசெய்த சிவபெருமானின் நஞ்சு அடர்ந்த கண்டத்தை அமுதமாக மாற்றிய நங்கை அன்னை பராசக்தி தனது பஞ்சு போன்ற கரங்களால் அணைத்து ஆறு குழந்தைகளை ஓருருவாய் செய்த அவ்வடிவேலனின் களவு மணம் வள்ளி தேவியுடன் ஈடேற யானையின் உரு கொண்டு வந்த வெள்ளை தந்தம் பொருந்திய ஒப்பற்ற விநாயகனின் அளவற்ற ஆற்றலைச் சொல்வதற்கு ஆன்றோரின் மொழியின் அகலம் கூட ஒரு துகள் போலவே தான் அமைகிறது!  






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி