அடிமையாய் நண்பனா யன்பனாய்க் கொடியா
யூர்தியாய்க் குடையாய்த் தூதனா யரியா
சனமா யருமருத் துவனாய்த் தளரா
மனமாள் சேனை முதல்வனாய்ப் புலவனா
யிராம னேற்ற மியம்பப் புவிதங்
குயிரா யொப்பிலி யுயர்வுபல பெற்றும்
பணிவே பணியாய் விளங்கு
மணிபோல் வாழ்ந்தான் மாந்தன் றேவே