மயிலாய்த் தாங்க வுயர்பே றில்லை
யயிலா யோங்க வருளீங் கில்லை
சேவற் கொடியாந் திருவு மில்லை
யாயினுந் தாயாய் வேளே
யோய்விலா துனபுக ழொலிக்குஞ்
செந்தமிழ்ச் செல்வஞ் செவிக்கீந் தனையே
உன்னை மயிலாகத் தாங்கும் அளவு பேறோ, அயிலாக ஓங்கும் அருளோ, சேவற்கொடியாகும் திருவோ எம்மிடம் அறவே இல்லை, என்றாலும் நீ தாயைப் போன்ற கருணை உடையவன் வேளே ஆதலால் ஓய்வு இல்லாது உனது புகழ் ஒலிக்கும் செந்தமிழ்ச் செல்வத்தை எமது செவிக்கு அளித்தனை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக