விளம் தேம தேமா
புளிமா புளிமா புளிமா
மதுவிரிந் தாடு பூவின்
மணமோ சுவையோ மயக்கும்
மதிமறந் தாடு வண்டு
மயலின் முழுது மிழக்கும்
விதிவிரிந் தாடு போது
விழைவே விழியீ ரடைக்குங்
கதிபயந் தாள்வ னாளப்
பயன்மீ துகப்புக் கனவே
மது விரிந்து ஆடு பூவின் - தேனானது மிக்கச் சுரக்க அசையும் பூவின்
மணமோ சுவையோ மயக்கும் - மணமோ அல்லது அதன் சுவையோ மயக்கும்?
மதி மறந்து ஆடு வண்டு - இதனால் ஈர்க்கப் பட்டுத் தன்னிலை மறந்த வண்டு அந்த மயலில் தன்னை முழுவுதுமாக ஈடுபட்டு இழந்துவிடும்
விதி விரிந்து ஆடு போது - மாற்றுதர்க்கரிய விதியானது தன் பிடியில் சிக்கிக் கொண்ட உயிர்களை ஆட்டிப் படைக்கும், அது அவ்வுயிர்களின் கண்கள் இரண்டையும் ஆசைகளால் மறைத்துவிடும்
கதி பயந்து ஆள்வன் ஆள - கதியைத் தரக் கூடிய இறைவன் அவ்வியிர்களை ஆண்டு அருளும் போது அருள்வான், அது நிச்சியமாக அவ்வுயிர்களின் கையில் இல்லை, அது இறைவனின் கருணையே! ஆகையினால்
பயன் மீது உகப்பு கனவே- அதனால் ஒரு பயன் கருதி நாம் முயல்வது என்பது வேடிக்கை மற்றும் அது வெறும் கனவுக்கு ஒப்பவாம் அறிவீர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக