வியாழன், 4 ஜூன், 2026

தோட்டை எழுசீர் மண்டிலம்

 தோட்டை வானில வாக்கி யன்பரின் 

       சொல்லை யுண்மைசெ யன்பினண்

மீட்டு வீணைய ணாணு சொல்லினள் 

        வேண்டு வார்துயர் தீர்ப்பவள்
 
காட்டி னட்டமா டீசர் பங்கினள் 
  
        காமன் மீளெழச் செய்தவள்

வாட்டு மாவினை மாய்க்கு மன்பினள் 

        மன்னு யிர்க்கெலா மன்னையே 

மூலமானவள் எழு சீர் மண்டிலம்

 மூல மானவள் மூவர் தாயவள் 

        மூன்று பாருமாள் சுந்தரி

கால மாள்பவள் காத லாள்பவள் 

        காவ லாண்மலை மாமகள்
 
கோல மானவள் கோவை யாள்பவள் 

        குன்ற மாள்குகன் றாயவள்
 
சூல மாள்பவள் சொன்ன மேனிய 

       டுன்ப மாய்க்குநம் மன்னையே

புதன், 3 ஜூன், 2026

நூறு முகங்களும் எழு சீர் மண்டிலம்

 நூறு முகங்களு நொறுங்கிடப் போரினி

னுழைபுலச் சாரதி மருகனுடை

யாறு முகங்களு மருள்வடி வானவை

யாறிரு திண்புயம் பகையொழிக்கு
மேறு மயிலழி மாயையின் பிடிதனை

யெண்ணிலி யறிவளி யயிறுணையெங்
கூறு மொழியினைக் குக்குடஞ் சீர்செயுங்

கோதிலி திருவடி கதிதருமே

அகந்தை என்னும் எழு சீர் மண்டிலம்

 அகந்தையென்னுஞ் சேற்றை யறக்களைவா னாளு 

          மருமறைகள் போற்று மிறைவன்

சுகந்துறந்து நாளுஞ் சினமொழித்த முனிவர் 

         சுகந்தனையே யெண்வார் நெஞ்சி

லகந்திகழு மாலை வனுபவிக்க நாமு 

         மருந்தவத்தா ரில்லை யெனினு

முகுந்தனதே யாவு மெனவுணர்ந்து கொண்டான் 

          மூவுலகுந் தருவான் காணே

திருவினைகள் நீங்கி எழு சீர் மண்டிலம்

 திருவினைக ணீங்கி யொருவழியாய் வாழ்விற் 

         றெளிவுறவே பாதை காண

வருமுயல்வை நாடி யனைத்துலகந் தேடி 

         யாவதொன்று மில்லை காணீர்

திருவுடைய மார்பன் றிகழொளிசே ராழிச் 

         செருத்தொடங்கு சங்கத் தலைவன்

றிருவடியைச் சேருந் திருநமக்குக் கிட்டத் 

        திருவுளமுங் கொள்வா னவனே

செவ்வாய், 2 ஜூன், 2026

அகந்தை அழிவுற எழுசீர் மண்டிலம்

 அகந்தை யழிவுற வகமலர்ந் தடிதொழ 

           வறிவளித் தருடர லுன்கடனே 

தகுந்த தடைந்திடத் தழைத்திட நற்குலந் 

           தாழ்விலி புகழ்தரு மொழிவளர 

வுகந்து துதிசெய வுரநிறை யுடலுற 

         வுனதிரு தாட்சரண் குறமுகண்மேன்

மிகுந்த வன்புடை விண்ணவர் காவல 

       வினையழி வேலுடைப் பெருமாளே 

இறையுள் உறைவது உலகா அறுசீர் மண்டிலம்

 இறையு ளுறைவ துலகோ வன்றி 

          யுலகு ளுறைவ திறையோ

நிறையு ளங்கங் குறையோ வன்றி 

        குறையி னிரையே நிறையோ

செறிவின் விரியே விரவோ வன்றி 

        விரிவே செறிவின் வித்தோ

முறையே மொழிவாய் முருகா 
 
     வென்று மூவா மொழியி னிறையே

மா மா மா மா 
    மா மா மா 

அறிவால் அறிவார்க்கு அறியன் எழுசீர் மண்டிலம்

 அறிவா லறிவார்க் கரிய னானா 

        லன்பா லடைவார்க் கெளியன்

பொறிவாய் விழுவார்க் கரிய னானால் 
     
         புகழ்பா டடியார்க் கெளியன்

நெறிவாய் நிற்போர்க் காசான் வாழ்வி 
   
        னிறைவாய்க் காண்போர்க் கிறைவன்

பிறைவா னிலவைச் சூடும் பரமன் 

           பிரியா னெங்க ணெஞ்சே

மா மா மா மா 
     மா மா மா   

சோழ வெண்பா

 ஏழைக்கு மீயு மெளிதிற் சதுரங்க 

வாழிக்கண் டேற்ற மறிஞராற்- சோழற்

களவிலா தள்ளித் தருமன் பியல்பே 

யொளிகதி ரோங்கு மரபு 

தோட்டை எழுசீர் மண்டிலம்

 தோட்டை வானில வாக்கி யன்பரின்         சொல்லை யுண்மைசெ யன்பினண் மீட்டு வீணைய ணாணு சொல்லினள்          வேண்டு வார்துயர் தீர்ப்பவள்   காட்டி னட்...