விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்
பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும்
பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம்
பழுதே துதியாத் திதி
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்
பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும்
பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம்
பழுதே துதியாத் திதி
அளவி லழகின் மறுபேர் முருகன்
றொளைவேன் மலைமா துகள்செ யொருவன்
வளைவில் லிராமன் வழுத்து மருகன்
விளைப்பான் விதிக்கும் விதி
மாவாய் பிளந்த மூவா முகுந்தனை
யேவா நகைத்து முப்புர மெரித்தா
னஞ்சடர் மிடற்றமு தாக்கு நங்கை
பஞ்சுக் கரமணை பாங்குசெய் வேலன்
களவிற் குறத்தி கைத்தலம் பற்றக்
களிற்றுரு வெடுத்த வெள்ளெயிற் றொருவ
னளவற்ற வாற்றலைச் செப்ப
வான்றோர் மொழியி னகலமுந் துகளே
பரங்குன்ற நீயே பரம்பொருளே வேளே
மரமொன்றிற் றீப மலர - வரந்தந்துநாவுடையார் நின்றேத்து நாயகனை யென்றென்றுஞ்
சாவறியா ருள்ளுள்ளுஞ் சர்ப்ப சயனனை
மாவலிபால் யாசித்த மாணியை மாவடிவை
யாவர்க்கு மாதியை யாண்டுமுறை மூலத்தை
நோவறியா நுங்கட்கு வீடளித் தாள்வானைப்
பாவடிவிற் பாங்குரைத்த பல்லுயுரு முய்யவவன்
சேவடிசேர் சீர்வழியைச் செப்பலுற்ற கோதைபுகழ்
நாவளர நாட்டு நயந்தேலோ ரெம்பாவாய்
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி