செவ்வேடன் சீர்த்தியைச் செந்திமிழாற் செப்பற்குச்
செவ்வேடன் செவ்வாயிற் சீரருளச் - செவ்வேடாம்
வாயலருஞ் சொல்லெல்லா மாற்றறியா மாந்தர்க்கும்
வாயலரும் வாயலரா மைக்கு
செவ்வேடன் சீர்த்தியைச் செந்திமிழாற் செப்பற்குச்
செவ்வேடன் செவ்வாயிற் சீரருளச் - செவ்வேடாம்
வாயலருஞ் சொல்லெல்லா மாற்றறியா மாந்தர்க்கும்
வாயலரும் வாயலரா மைக்கு
அரவணைக்கும் வான்மதிக் கௌடதத்தைத் தேர்ந்து
தரவிழைவா ரிந்நாள் சரீரந் துலக்கி
யொருமனத்து மந்திர முச்சரித்து மீண்டு
மிரவனைத்தி னாண்மை யிகல்வென் றடைய
வரவணைத்துக் காப்பா ரரண்
மறைமதி யான மணவாழ்வை நொந்து
பிறைமதியா மாற்றப் பிரானிடம் வேண்ட
நிறைமதியா மாற்றி நிமலன்றர வந்த
விறைவனையே யெட்டுணையு மெண்ணா துழன்று
சிறைவாழ்விற் சிக்கிச் சிதைந்துநிற் போர்க்கு
நிறைதேன் மலர்மேன்மோ கிக்கு ஞிமிறு
முறைமறந்து தல்லாடி மூடிதழின் மூழ்கி
மறைந்துபோம் வான்மீனோ வாழ்வு
வாசமிகு மல்லிகையை மாதுமுடி சூட்டுமதித்
தேசமிகு தேவி சிவையொளிர வீசற்கு
மேமதரு மாலைப் பொழுது
மயக்குயர் விக்கும் வனப்புணர் விக்குந்
தயக்ககற்றிச் சேர்க்குஞ் சனத்தை நயத்தலுக்கே
ஞாலநல்கு மாலைப் பொழுது
தினத்திற் பணியாழச் சிந்தனை செல்லு
மனைத்து மடங்கு மிராவு வனப்புயர்
மாலையே வையத் துகப்பு
செவ்வேடன் சீர்த்தியைச் செந்திமிழாற் செப்பற்குச் செவ்வேடன் செவ்வாயிற் சீரருளச் - செவ்வேடாம் வாயலருஞ் சொல்லெல்லா மாற்றறியா மாந்தர்க்கும் வாயல...