செவ்வேடன் சீர்த்தியைச் செந்திமிழாற் செப்பற்குச்
செவ்வேடன் செவ்வாயிற் சீரருளச் - செவ்வேடாம்
வாயலருஞ் சொல்லெல்லா மாற்றறியா மாந்தர்க்கும்
வாயலரும் வாயலரா மைக்கு
செவ்வேள் தன் சீர்த்தியை செந்தமிழால் செப்பற்கு
செ வேடன் செவ்வாயில் சீர் அருள செ ஏடு ஆம்
வாய் அலரும் சொல் எல்லாம் மாற்று அறியா மாந்தர்க்கும்
வாய் அலரும் வாய் அலராம் ஐக்கு
செவ்வேள் தன் சீர்த்தியை செந்தமிழால் செப்பற்கு செ வேடன் செவ்வாயில் சீர் அருள - செவ்வேளாகிய முருகப் பெருமானின் கீர்த்தியைச் செந்திமிழால் சொல்வதற்கு செம்மை எனும் குணம் கொண்ட வேடனாக வந்த அம்முருகப் பெருமானே இந்தச் செவ்வாய்க் கிழமையில் சீரை அருள
மாற்று அறியா மாந்தர்க்கும் வாய் அலரும் சொல் எல்லாம் செ ஏடு ஆம் - பதில் கூட கூறத் தெரியாத மாந்தருக்கும் அவர்கள் வாயிலிருந்து மலரும் சொற்கள் யாவும் செம்மையான ஏட்டைப் போன்ற உயர் குணம் பெறும்
வாய் அலரும் - வாயினிருந்து வரும் பழிச் சொல்லும் கூட
வாய் அலராம் ஐக்கு - சீர் பொருந்திய மாலை ஆகும் தலைவனாகிய முருகப் பெருமானுக்கு
முருகப் பெருமான் தனது பெருமையைச் செந்தமிழால் உரைக்கப் பேறு அருள பதிலளிக்க இயலா மாந்தருக்கும் வாயின் மலரும் சொல் எல்லாம் செம்மை உடைய ஏடு போன்றதாகும்! நமது தலைவன் பழிச்சொல்லையும் செந்தமிழாக இருப்பின் பெருமைக்குரிய மாலையாகக் கொண்டு நம்மை அருளும் கருணைக் கடலன்றோ!
chevvEdan chIrthiyaich chendhamizhaR cheppaRkuch
chevvEdan chevvayiR chIraruLach chevvEdAm
vAyalarun jollellA mARRaRiyA mAndharkkum
vAyalarum vAyalara maikku
When the divine hunter(the form Lord Murugan took when he came to win Devi VaLLi's hand) gives grace during Tuesday to sing the exploits of chevvEL (Murugan, himself) in the classical language of thamizh(chendhamizh) then whatever the people who do not even know to answer blurt out from their mouth becomes divine poetry! For our Lord even accepts scoldings in chendhamizh as a flower garland and showers grace on his devotees!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக